சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் முதுகலை படிப்புகளுக்கு விண்ணப்பிக்க கால அவகாசம்

By அ.அருள்தாசன்

திருநெல்வேலி சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் முதுகலை படிப்புகளுக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக பதிவாளர் சே. சந்தோஷ்பாபு வெளியிட்ட செய்திக் குறிப்பு:

திருநெல்வேலி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத் துறைகளில் 2020-2021-ம் கல்வியாண்டில் முதுகலை பாடப்பிரிவுகளுக்கு சேர்க்கை நடைபெற்று வருகிறது.

முதுகலை பொருளாதாரம், கல்வியியல், சுற்றுச்சூழல் அறிவியல், நானோ அறிவியல், பயன்பாட்டு புவி இயற்பியல், வரலாறு, தகவல் தொழில்நுட்பவியல், இணைய பாதுகாப்பு, தரவு பகுப்பாய்வு, கடல்வாழ் உயிரின உயிரி தொழில்நுட்பவியல், நுண்ணுயிரியல், கரிம வேதியியல், உடற்கல்வியியல், தாவரவியல், புதுப்பிக்கத்தக்க ஆற்றல் மற்றும் மேலாண்மையும் தணிக்கையும் (முதுகலை பட்டயப்படிப்பு), சமூகவியல், நூலக படிப்புகள் ஆகிய பாடப்பிரிவுகளில் ஒருசில காலியிடங்கள் மட்டுமே உள்ளன.

இந்த காலியிடங்களுக்கு விண்ணப்பங்கள் பெறுவதற்கு கடைசி நாள் வரும் 28-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

மேலும் விவரங்களுக்கு பல்கலைக்கழக தொலைபேசி மூலமாகவோ அல்லது www.msuniv.ac.inஎன்ற இணையதளத்தின் மூலமாகவோ அறிந்து கொள்ளலாம் என்று தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

7 mins ago

தமிழகம்

33 mins ago

தமிழகம்

42 mins ago

தமிழகம்

1 hour ago

இந்தியா

1 hour ago

தமிழகம்

1 hour ago

வணிகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

இந்தியா

2 hours ago

தமிழகம்

2 hours ago

மேலும்