பருவத்தேர்வுகள் நடத்துவது குறித்து ஆராய 11 பேர் கொண்ட நிபுணர் குழு: தமிழக அரசு அறிவிப்பு

By செய்திப்பிரிவு

பருவத்தேர்வுகள் நடத்துவது தொடர்பாக ஆராய உயர்கல்வித் துறைச் செயலர் தலைமையில் 11 பேர் கொண்ட நிபுணர் குழு அமைக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து தலைமைச் செயலர் கே.சண்முகம் வெளியிட்ட அரசாணையில் கூறியிருப்பதாவது:

கரோனா பாதிப்பின் காரணமாக பல்கலைக்கழகங்கள் பருவத்தேர்வுகளை நடத்த முடியாத சூழலில் உள்ளன. இதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்ட பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி) நிலைமையின் தீவிரத்தை பொறுத்து அந்தந்த பல்கலைக்கழகங்களே முடிவெடுத்துக் கொள்ள அறிவுறுத்தியுள்ளது.

அதன் அடிப்படையில் பருவத்தேர்வுகள் நடத்துவது தொடர்பாக ஆராய்ந்து பரிந்துரைகள் வழங்க உயர்கல்வித் துறை முதன்மைச் செயலர் அபூர்வா தலைமையில் 11 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது.

இதன் உறுப்பினர்களாக விளையாட்டுத் துறைச் செயலர், தகவல் தொழில்நுட்பத் துறைச் செயலர், அண்ணா பல்கலை. துணைவேந்தர், தொழில்நுட்பக் கல்வி ஆணையர், தஞ்சை தமிழ் பல்கலை. துணைவேந்தர், பாரதிதாசன் பல்கலை. துணைவேந்தர் உள்ளிட்ட 10 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர். இந்தக் குழு யுஜிசி வழிகாட்டுதல்களின்படி பருவத்தேர்வுகளை நடத்துவது தொடர்பாக தன் பரிந்துரைகளை வழங்கும்.

இவ்வாறு அரசாணையில் கூறப்பட்டுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

25 mins ago

கருத்துப் பேழை

9 mins ago

தமிழகம்

45 mins ago

வணிகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

வாழ்வியல்

2 hours ago

சினிமா

2 hours ago

சினிமா

6 hours ago

தமிழகம்

6 hours ago

சினிமா

2 hours ago

இந்தியா

2 hours ago

இந்தியா

3 hours ago

மேலும்