Published : 05 May 2024 10:10 AM
Last Updated : 05 May 2024 10:10 AM

3-ம் கட்ட மக்களவைத் தேர்தலில் அமித் ஷா, டிம்பிள்

காந்திநகர்: நாடு முழுவதும் 7 கட்டங்களாக மக்களவைத் தேர்தல் நடைபெறுகிறது. இதன்படி கடந்த ஏப்ரல் 19-ம் தேதி 102 தொகுதிகளுக்கும் ஏப்ரல் 26-ம் தேதி 88 தொகுதிகளுக்கும் வாக்குப்பதிவு நடைபெற்றது. மூன்றாம் கட்டமாக நாளை மறுநாள் குஜராத், கர்நாடகா உள்ளிட்ட 12 மாநிலங்களைச் சேர்ந்த 95 தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெற இருக்கிறது. மொத்தம் 1,351 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். இந்த தேர்தலில் பல்வேறு விஐபி வேட்பாளர்களும் களத்தில் உள்ளனர்.

அமைச்சர் அமித் ஷா: மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா குஜராத்தின் காந்திநகர் மக்களவைத் தொகுதியில் 2-வது முறையாக போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து காங்கிரஸ் சார்பில் சோனல் படேல் களமிறங்கி உள்ளார். கடந்த 1989-ம் ஆண்டு முதல் காந்தி நகர் மக்களவைத் தொகுதி பாஜகவின் கோட்டையாகத் திகழ்கிறது. கடந்த 2019-ம் ஆண்டு தேர்தலில் அமைச்சர் அமித் ஷா 5.55 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.

டிம்பிள் யாதவ்: உ.பியின் மெயின்புரி தொகுதி சமாஜ்வாதி நிறுவனர் முலாயம் சிங்கின் தொகுதி ஆகும். கடந்த 2022-ல் அவர் காலமானார். அப்போது அந்த தொகுதியில் நடைபெற்ற இடைத்தேர்தலில் அவரது மருமகள் டிம்பிள் யாதவ் வெற்றி பெற்றார்.அதே தொகுதியில் அவர் மீண்டும் களமிறங்குகிறார். அவரை எதிர்த்து பாஜக சார்பில் ஜெய்வீர் சிங் போட்டியிடுகிறார்.

ஜோதிர் ஆதித்ய சிந்தியா: மத்திய அமைச்சரும் பாஜக மூத்த தலைவருமான ஜோதிர் ஆதித்ய சிந்தியா மத்திய பிரதேசத்தின் குணாமக்களவைத் தொகுதியில் போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து காங்கிரஸ் சார்பில் ராவ் யத்வேந்திர சிங் களமிறங்கி உள்ளார்.

கடந்த 2019-ம் ஆண்டு தேர்தலில் இதே தொகுதியில் காங்கிரஸ் சார்பில் ஜோதிர் ஆதித்ய சிந்தியா போட்டியிட்டார். அப்போது பாஜக வேட்பாளர் பாஜக வேட்பாளர் கிருஷ்ண பால் சிங்கிடம் அவர் தோல்வி அடைந்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x