கரோனா தடுப்புப் பணியில் என்சிசி மாணவர்கள்: மதுரையில் 100-க்கும் மேற்பட்டோர் களமிறங்கினர்

By என்.சன்னாசி

மதுரையில் கரோனா தடுப்புப் பணியில் போலீஸாருடன் இணைந்து, 100-க்கும் மேற்பட்ட என்சிசி மாணவர்கள் களமிறங்கியுள்ளனர்.

கரோனா வைரஸ் பரவலைத் தடுக்க, ஊரடங்கை அமல்படுத்தும் பணியில் போலீஸார் உள்ளிட்ட பல்வேறு துறையினரும் பணிபுரிகின்றனர்.

மதுரை நகரில் போலீஸார், ஊர்க்காவல் படை யினர், தன்னார்வலர்களை இணைத்துக் கொண்டும் தொற்று தடுப்புப் பணியில் தொடர்ந்து ஈடுபடுகின்றனர்.

கரோனா தடுப்புப் பணியில், ஆர்வமுள்ள கல்லூரி என்சிசி, என்எஸ்எஸ் மாணவர்களும் தன்னார்வலர்களாக இணைந்து செயல்படலாம் என, காவல்துறை சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் மதுரை தியாகராசர் பொறியியல், கலை, அறிவி யல் கல்லூரிகள், அமெரிக்கன் கல்லூரி, யாதவர், லதா மாதவன் பாலிடெக்னிக் கல்லூரிகளைச் சேர்ந்த சுமார் 111 மாணவர்கள் தன்னார்வலர்களாக பணிபுரிய முன்வந்தனர்.

அவர்களுக்கு கோரிப்பாளையம், மாட்டுத்தாவணி, கூடல்நகர், திருமங்கலம் போன்ற பகுதியில் பணி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

காலை 9 முதல் மாலை 4 மணி வரை போலீஸாருடன் இணைந்து வாகனத் தணிக்கை உள்ளிட்ட கரோனா தடுப்பு பணியில் ஈடுபடுகின்றனர்.

இவர்களுக்கு தேவையான முகக் கவசம் உள்ளிட்ட பாதுகாப்பு உபகரணங்களும் வழங்கப்பட்டுள்ளன.

மாணவர்களின் பணியை தேசிய மாணவர் படை அலுவலர்கள் காட்வின், பிரின்ஸ், வினோத், ஜூனியர் காமாண்டர்கள் சியாம், சுகேஷ் ஆகியோர் ஒருங்கிணைக்கின்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

1 hour ago

க்ரைம்

5 hours ago

விளையாட்டு

5 hours ago

இந்தியா

5 hours ago

விளையாட்டு

7 hours ago

தமிழகம்

7 hours ago

சினிமா

7 hours ago

கல்வி

7 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

சினிமா

9 hours ago

தமிழகம்

9 hours ago

மேலும்