கரோனா பரவல் இருப்பதால் சிபிஎஸ்இ 10, 12-ம் வகுப்பு தேர்வுகளை ஆன்லைனில் நடத்த வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் நேற்று வெளியிட்ட அறிக்கை:
கரோனா பரவலால் ஒட்டுமொத்த இந்தியாவும் அச்சத்தில்மூழ்கியுள்ள நிலையில், பொதுத் தேர்வு நடத்துவதில் சிபிஎஸ்இ பிடிவாதம் காட்டுவது நியாயம் அல்ல. இந்த சூழலில், பொதுத் தேர்வு நடத்தப்பட்டால் கண்டிப்பாக மாணவர்களுக்கு கரோனா தொற்று ஏற்படும்.
சிபிஎஸ்இ பாடத் திட்டத்தை பின்பற்றும் கேந்திரிய வித்யாலயாமற்றும் தனியார் பள்ளிகளில் பொதுத்தேர்வுக்கு முந்தைய தேர்வுகள் சிறப்பாக நடத்தப்பட்டுள்ளன. தமிழகத்திலும் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு இதேபோன்ற தேர்வுகள் நடத்தப்பட்டுள்ளன.
எனவே, மாநில பாடத்திட்டத்தின் படியான 12-ம் வகுப்பு பொதுத் தேர்வுகளை ரத்து செய்துவிட்டு அதற்கு முந்தைய தேர்வுகளில் மாணவர்கள் பெற்ற மதிப்பெண்களின் அடிப்படையில் அவர்கள் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்க வேண்டும். தேர்வு நடத்தியே தீர வேண்டும் என்றால் ஆன்லைனில் நடத்தலாம். சிபிஎஸ்இ 10, 12-ம் வகுப்பு பொதுத் தேர்வுகளையும் ஆன்லைனில் நடத்த சம்பந்தப்பட்ட கல்வி வாரியங்கள் முன்வர வேண்டும்.
முக்கிய செய்திகள்
ஜோதிடம்
1 hour ago
ஜோதிடம்
1 hour ago
இந்தியா
5 hours ago
விளையாட்டு
7 hours ago
க்ரைம்
7 hours ago
உலகம்
8 hours ago
விளையாட்டு
9 hours ago
வேலை வாய்ப்பு
9 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
10 hours ago
விளையாட்டு
10 hours ago
கல்வி
10 hours ago