கரோனா பரவல் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவதுடன் மக்களுக்கு கபசுரக் குடிநீர், முகக் கவசம், சானிடைசர் வழங்க வேண்டும் என்று திமுக நிர்வாகிகள், தொண்டர்களை அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் கேட்டுக் கொண்டுள்ளார். கோடையில் தாகத்தை தணிக்க தண்ணீர் பந்தல்களை அமைக்க வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.
இதுகுறித்து ஸ்டாலின் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:
தேர்தல் நேரம் மட்டுமல்ல, எப்போதும் மக்களுடன் இணைந்திருக்கும் பேரியக்கம்தான் திமுக.கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் கரோனா பேரிடரால் தவித்த மக்களுக்கு உதவும் வகையில் ‘ஒன்றிணைவோம் வா’ எனும் செயல்பாட்டின் மூலம், கட்சிப் பாகுபாடுஇன்றி அனைத்துத் தரப்பினருக்கான உணவு, மருத்துவ உதவி உள்ளிட்ட அத்தியாவசியத் தேவைகளை திமுக நிறைவேற்றியது. திமுகவின் அனைத்து நிர்வாகிகளும் தொண்டர்களும் அதில் பங்கேற்று தொண்டாற்றினர்.
இந்த கோடைக்காலத்தில் மக்களின் தாகம் தணிக்க திமுக சார்பில் தண்ணீர்ப் பந்தல்கள் அமைக்க வேண்டும். கரோனா 2-வது அலை குறித்து மருத்துவர்களும், சுகாதாரத் துறையும் எச்சரிக்கை செய்திருப்பதால் அதுகுறித்த விழிப்புணர்வை மக்களிடம் ஏற்படுத்துங்கள்.
மக்களுக்கு கபசுரக் குடிநீர்வழங்குங்கள். வாய்ப்பு உள்ள இடங்களில் முகக் கவசம், சானிடைசர் வழங்குங்கள்.
தேர்தல் முடிவுகளில் நல்ல தீர்ப்பு நிச்சயம் வரும். எனினும், அதுவரை காத்திருக்காமல் மக்களுக்கான பணியை எப்போதும்போல இப்போதும் தொடர்ந்திட ‘ஒன்றிணைவோம் வாருங்கள்’.
இவ்வாறு அறிக்கையில் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
முக்கிய செய்திகள்
விளையாட்டு
22 mins ago
சினிமா
42 mins ago
சுற்றுச்சூழல்
1 hour ago
விளையாட்டு
2 hours ago
இந்தியா
4 hours ago
வலைஞர் பக்கம்
5 hours ago
இந்தியா
5 hours ago
தமிழகம்
5 hours ago
இந்தியா
6 hours ago
தமிழகம்
6 hours ago
இந்தியா
6 hours ago
ஜோதிடம்
5 hours ago