பணப் பட்டுவாடா புகார் ரகசிய படையை அமைத்த மாவட்ட ஆட்சியர் :

By செய்திப்பிரிவு

சிவகங்கை மாவட்டத்தில் தொடர் பணப் பட்டுவாடா புகாரையடுத்து மாவட்டத் தேர்தல் அலுவலரும், ஆட்சியருமான பி.மதுசூதன்ரெட்டி ரகசியப் படையை அமைத்துள்ளார்.

சிவகங்கை மாவட்டத்தில் பணப் பட்டுவாடாவை கண்காணிக்க பறக்கும் படை, நிலையான கண்காணிப்புக் குழு, செலவின கண்காணிப்புக் குழு போன்றவை அமைக்கப்பட்டுள்ளன. இருந்தபோதிலும், வாக்குப்பதிவுக்கு இன்னும் 2 நாட்களே உள்ள நிலையில் ஆங்காங்கே பணப்பட்டுவாடா நடப்ப தாகத் தொடர்ந்து புகார்கள் வந்த வண்ணம் உள்ளன. பறக்கும்படை அதிகாரிகள் முறையாகக் கண்காணிப் பதில்லை என கட்சியினர் புகார் தெரி வித்துள்ளனர்.

இதையடுத்து பணப் பட்டுவாடாவை ரகசியமாகக் கண்காணித்து நட வடிக்கை எடுக்க போலீஸ் குழுவை ஆட்சியர் பி.மதுசூதன்ரெட்டி நிய மித்துள்ளார். இக்குழுவினர் தேர்தல் அதிகாரிகள் செல்லும் இடங்களில் கண்காணித்து வருகின்றனர். பணப்பட்டுவாடா செய்வோரைப் பிடித்ததும் வழக்கு பதிய உத்தரவிடப்பட்டுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஜோதிடம்

32 mins ago

ஜோதிடம்

36 mins ago

இந்தியா

4 hours ago

விளையாட்டு

6 hours ago

க்ரைம்

7 hours ago

உலகம்

8 hours ago

விளையாட்டு

8 hours ago

வேலை வாய்ப்பு

8 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

விளையாட்டு

9 hours ago

கல்வி

10 hours ago

மேலும்