அனைத்து தொகுதிகளுக்கும் சமமான நிதி ஒதுக்கீடு செய்யப்படும் என்று உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு உத்தரவாதம் அளித்துள்ளது.
இதுதொடர்பாக நாமக்கல் மாவட்டம் அனிமூர் ஊராட்சித் தலைவர் தாமரைச்செல்வன், சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த மனுவில் கூறியிருப்பதாவது:
நாமக்கல் மாவட்டத்தில் ஊரகப் பகுதிகளுக்கான முன்னுரிமைத் திட்ட நிதியில் இருந்து, கடந்தஅதிமுக ஆட்சியின்போது அமைச்சராக இருந்த தங்கமணியின் தொகுதியான குமாரபாளையத்துக்கு மட்டும் ரூ.20.61கோடி நிதி, சாலை உள்ளிட்ட கட்டமைப்புப் பணிகளுக்காக ஒதுக்கப்பட்டுள்ளது. ஆனால்,மற்ற பகுதிகளுக்கு குறைவான நிதியே ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. எனவே, அனைத்துதொகுதிகளுக்கும் சமமான நிதிஒதுக்கீடு செய்ய உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் வலியுறுத்தியிருந்தார். இந்த வழக்கு,தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி, நீதிபதி பி.டி.ஆதிகேசவலு அமர்வில் விசாரணைக்கு வந்தது.
அப்போது, அரசு ப்ளீடர்பி.முத்துகுமார் ஆஜராகி, அரசின் நலத் திட்டங்களை செயல்படுத்த அனைத்து தொகுதிகளுக்கும் சமமான நிதி ஒதுக்கீடு செய்வதுஉறுதி செய்யப்படும் என உத்தரவாதம் அளித்தார். இதை ஏற்றநீதிபதிகள், அனைத்து தொகுதிகளுக்கும் அரசு பாரபட்சமின்றி சமமான நிதி ஒதுக்கீடு செய்யும் என்று நம்புவதாக தெரிவித்து, வழக்கு விசாரணையை 2022-ம்ஆண்டு பிப். 16-ம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.
முக்கிய செய்திகள்
சினிமா
3 mins ago
தமிழகம்
7 mins ago
தமிழகம்
10 mins ago
சுற்றுலா
22 mins ago
தமிழகம்
24 mins ago
சினிமா
29 mins ago
கருத்துப் பேழை
1 hour ago
இந்தியா
32 mins ago
தமிழகம்
1 hour ago
விளையாட்டு
1 hour ago
தமிழகம்
2 hours ago
சினிமா
2 hours ago