பொதுப்பணித்துறை ஊழியர்கள் ஒப்பாரி போராட்டம்

By செய்திப்பிரிவு

காரைக்காலில் தொடர் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்ட, பொதுப்பணித்துறை வவுச்சர் ஊழியர்கள் நேற்று ஒப்பாரி வைக்கும் போராட்டம் நடத்தினர்.

காரைக்கால் பொதுப்பணித் துறையில் வவுச்சர் ஊழியர்களாக 126 பேர், கடந்த 10 ஆண்டுகளாக சாலை பராமரிப்பு, தண்ணீர் தொட்டி பராமரிப்பு உள்ளிட்ட பல்வேறு பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இவர்களுக்கு மாதத்தில் 16 நாட்கள் மட்டும் வேலை, ரூ.3,200 ஊதியம் வழங்கப்படுகிறது. இந்த ஊதியத்தைக்கொண்டு குடும்ப நடத்த இயலாது. எனவே, புதுச்சேரி அரசு தங்களின் வாழ்வாதார நிலையைக் கருத்தில் கொண்டு மத்திய அரசின் சட்டக்கூலியான நாள் ஒன்றுக்கு ரூ.648 வழங்க வேண்டும். மாதம் முழுவதும் பணி வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, பொதுப்பணித் துறை வவுச்சர் ஊழியர் சங்கத்தின் சார்பில் தொடர் வேலை நிறுத்தப்போரட்டம் நடைபெற்று வருகிறது.

கோரிக்கைகளுக்கு அரசு செவி சாய்க்காத நிலையில், போராட்டத்தின் 13-வது நாளான நேற்று காரைக்கால் பொதுப்பணித்துறை அலுவலகம் அருகில் வவுச்சர் ஊழியர்கள் ஒப்பாரி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

50 mins ago

தமிழகம்

54 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

3 hours ago

க்ரைம்

4 hours ago

விளையாட்டு

4 hours ago

இந்தியா

4 hours ago

வணிகம்

5 hours ago

தமிழகம்

6 hours ago

விளையாட்டு

6 hours ago

தமிழகம்

13 hours ago

மேலும்