ஈரோடு: சிறுமியைக் கடத்தி திருமணம் செய்த வழக்கில் கூலித் தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை விதித்து ஈரோடு மகளிர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஈரோடு மாவட்டம் அந்தியூரை அடுத்த பி.கே.புதூரைச் சேர்ந்தவர் ராஜமாணிக்கம் (23). கூலித்தொழிலாளி. இவர் பவானி பகுதியைச் சேர்ந்த 11 வயது சிறுமியைக் கடத்திச் சென்று திருமணம் செய்தது தொடர்பாக, பவானி அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் சிறுமியின் பெற்றோர் புகார் அளித்தனர். இதையடுத்து ராஜமாணிக்கத்தை போலீஸார் கைது செய்தனர். கடந்த ஆண்டு மே மாதம் இந்த சம்பவம் நடந்தது. இந்த வழக்கு விசாரணை ஈரோடு மகளிர் விரைவு நீதிமன்றத்தில் நடந்து வந்தது.
வழக்கை விசாரித்த நீதிபதி, சிறுமியைக் கடத்தி திருமணம் செய்து பாலியல் குற்றத்தில் ஈடுபட்டதற்காக 20 ஆண்டு சிறை தண்டனை மற்றும் ரூ.5000 அபராதம் விதித்து தீர்ப்பளித்தார். பாதிக்கப்பட்ட சிறுமிக்கு ரூ.2 லட்சம் அரசு நிதியுதவி அளிக்கவும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார். இந்த வழக்கில் அரசு தரப்பில் வழக்கறிஞர் ஜெயந்தி ஆஜரானார்.
முக்கிய செய்திகள்
வாழ்வியல்
10 mins ago
சினிமா
22 mins ago
சினிமா
4 hours ago
தமிழகம்
4 hours ago
சினிமா
56 mins ago
இந்தியா
1 hour ago
இந்தியா
1 hour ago
இந்தியா
1 hour ago
தமிழகம்
1 hour ago
இந்தியா
1 hour ago
இந்தியா
1 hour ago
இந்தியா
2 hours ago