தொடர் விடுமுறையால் புதுவையில் குவிந்த சுற்றுலா பயணிகள் :

By செய்திப்பிரிவு

தொடர் விடுமுறையால் புதுச்சேரியில் சுற்றுலா பயணிகள் குவிந்தனர்.

நவராத்திரி பண்டிகையையொட்டி நாடு முழுவதும் தொடர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. வரும் 19/ம் தேதி வரை விடுமுறை உள்ளது. இதனால் தமிழகம், கர்நாடகா, தெலுங்கானா, ஆந்திராவில் இருந்து சுற்றுலா பயணிகள் புதுவையில் குவிந்துள்ளனர். ஆயுதபூஜை முடிந்தவுடன் நேற்று மாலையிலிருந்து புதுவைக்கு வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்தது. நகர பகுதியில் சுற்றுலா பயணிகளின் நடமாட்டம் அதிகமாக இருந்தது. கடற்கரை சாலையில் அதிகாலையிலேயே சுற்றுலா பயணிகள் குவிந்தனர்.

சுற்றுலா பயணிகள் கடற்கரை மணல்பரப்பில் விளையாடியும், குளித்தும் மகிழ்ந்தனர். இதேபோல சுற்றுலா தலங்களான நோணாங்குப்பம் படகு குழாம், சின்னவீராம்பாட்டினம் கடற்கரை, பாண்டி மெரீனா கடற்கரை ஆகியவற்றில் சுற்றுலா பயணிகள் அதிகளவில் குவிந்திருந்தனர். விடுதிகள், ஓட்டல்கள் நிரம்பி வழிந்தன.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

கருத்துப் பேழை

1 min ago

இந்தியா

9 mins ago

இந்தியா

18 mins ago

உலகம்

29 mins ago

இந்தியா

38 mins ago

இந்தியா

32 mins ago

இந்தியா

55 mins ago

விளையாட்டு

1 hour ago

விளையாட்டு

1 hour ago

இந்தியா

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

மேலும்