சுகாதாரமான பிரசாதம் தயார் செய்யும் : கள்ளழகர், முருகன் கோயில்களுக்கு மத்திய அரசின் உணவு தரச்சான்று

By செய்திப்பிரிவு

கள்ளழகர் மற்றும் சோலைமலை முருகன் கோயில்கள் சுகாதாரமான பிரசாதம் தயார் செய்வதற்காக மத்திய உணவுப் பாதுகாப்புத்துறை தரச்சான்று வழங்கியுள்ளது.

மாநில அரசின் உணவுப் பாதுகாப்புத்துறை மற்றும் மருந்து நிர்வாகத்துறை சார்பில் மதுரை மாவட்ட அளவிலான வழிகாட்டுதல் குழுக்கூட்டம் நடைபெற்றது.

மாவட்ட உணவு பாதுகாப்புத்துறை அலுவலர் ஜெயராமன் முன்னிலை வகித்தார். கூட்டத்தில், அழகர்கோவில் கள்ளழகர் கோயில், சோலைமலை முருகன் கோயில்களில் சுகாதாரமான பிரசாதம், அன்னதானம், பிரசாத விற்பனை என பல கட்ட ஆய்வுகளின் முடிவில் மத்திய அரசின் உணவுப் பாதுகாப்புத் துறை கள்ளழகர் கோயில், சோலைமலை முருகன் கோயில்களுக்கு தனித் தனியாகத் தரச்சான்று வழங்கியுள்ளது.

இதற்கான சான்றிதழ்களை ஆட்சியர் எஸ்.அனீஷ்சேகர், கோயில் கண்காணிப்பாளர் நாராயணியிடம் வழங்கினார். மதுரை மாவட்டத்தில் உள்ள இந்து சமய அறநிலையத்துறை கோயில்கள் முதலாவதாக மத்திய அரசின் உணவுப் பாதுகாப்புத்துறை தரச்சான்றைப் பெறுவது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஜோதிடம்

1 hour ago

ஜோதிடம்

1 hour ago

இந்தியா

5 hours ago

விளையாட்டு

7 hours ago

க்ரைம்

8 hours ago

உலகம்

9 hours ago

விளையாட்டு

9 hours ago

வேலை வாய்ப்பு

9 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

10 hours ago

விளையாட்டு

10 hours ago

கல்வி

10 hours ago

மேலும்