கள்ளழகர் மற்றும் சோலைமலை முருகன் கோயில்கள் சுகாதாரமான பிரசாதம் தயார் செய்வதற்காக மத்திய உணவுப் பாதுகாப்புத்துறை தரச்சான்று வழங்கியுள்ளது.
மாநில அரசின் உணவுப் பாதுகாப்புத்துறை மற்றும் மருந்து நிர்வாகத்துறை சார்பில் மதுரை மாவட்ட அளவிலான வழிகாட்டுதல் குழுக்கூட்டம் நடைபெற்றது.
மாவட்ட உணவு பாதுகாப்புத்துறை அலுவலர் ஜெயராமன் முன்னிலை வகித்தார். கூட்டத்தில், அழகர்கோவில் கள்ளழகர் கோயில், சோலைமலை முருகன் கோயில்களில் சுகாதாரமான பிரசாதம், அன்னதானம், பிரசாத விற்பனை என பல கட்ட ஆய்வுகளின் முடிவில் மத்திய அரசின் உணவுப் பாதுகாப்புத் துறை கள்ளழகர் கோயில், சோலைமலை முருகன் கோயில்களுக்கு தனித் தனியாகத் தரச்சான்று வழங்கியுள்ளது.
இதற்கான சான்றிதழ்களை ஆட்சியர் எஸ்.அனீஷ்சேகர், கோயில் கண்காணிப்பாளர் நாராயணியிடம் வழங்கினார். மதுரை மாவட்டத்தில் உள்ள இந்து சமய அறநிலையத்துறை கோயில்கள் முதலாவதாக மத்திய அரசின் உணவுப் பாதுகாப்புத்துறை தரச்சான்றைப் பெறுவது குறிப்பிடத்தக்கது.
முக்கிய செய்திகள்
ஜோதிடம்
1 hour ago
ஜோதிடம்
1 hour ago
இந்தியா
5 hours ago
விளையாட்டு
7 hours ago
க்ரைம்
8 hours ago
உலகம்
9 hours ago
விளையாட்டு
9 hours ago
வேலை வாய்ப்பு
9 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
10 hours ago
விளையாட்டு
10 hours ago
கல்வி
10 hours ago