தருமபுரி மாவட்டம் காரிமங்கலம் அருகே லாரி மீது கார் மோதிய விபத்தில் கர்நாடகா மாநில இளைஞர் உயிரிழந்தார்.
நேற்று பகலில் தருமபுரியில் இருந்து பெங்களூரு நோக்கி கார் ஒன்று தேசிய நெடுஞ்சாலையில் சென்றுகொண்டிருந்தது. காரை, கர்நாடக மாநிலம் பெங்களூருவைச் சேர்ந்த பிரவீன்குமார் (27) என்பவர் ஓட்டிச் சென்றார். வாடிக்கையாளரை இறக்கி விட்டுவிட்டு ஓட்டுநர் மட்டும் தனியாக பெங்களூரு திரும்பிக் கொண்டிருந்தார். காரிமங்கலம் அடுத்த சமத்துவபுரம் பகுதியில் சென்றபோது, சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த லாரியின் பின்பகுதியில் எதிர்பாராத விதமாக கார் மோதியது. இந்த விபத்தில் காரை ஓட்டிச் சென்ற பிரவீன்குமார் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். தகவல் அறிந்த காரிமங்கலம் போலீஸார் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்து குறித்தும் போலீஸார் விசாரிக்கின்றனர்.
முக்கிய செய்திகள்
ஜோதிடம்
1 hour ago
ஜோதிடம்
1 hour ago
இந்தியா
5 hours ago
விளையாட்டு
7 hours ago
க்ரைம்
8 hours ago
உலகம்
8 hours ago
விளையாட்டு
9 hours ago
வேலை வாய்ப்பு
9 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
10 hours ago
விளையாட்டு
10 hours ago
கல்வி
10 hours ago