வந்தவாசி அருகே ஏரியில் விழுந்து தொழிலாளி பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
திருவண்ணாமலை மாவட்டம் தண்டராம்பட்டு அடுத்த இளையனார்கன்னி கிராமத்தில் வசித்தவர் பிலிப்ஸ்ராஜ்(45). இவர், வந்தவாசி அடுத்த மீசநல்லூர் கிராமத்தில் உள்ள ஏரியில் வளர்க்கப்படும் மீன்களை பாதுகாக்கும் பணியில் ஈடுபட்டிருந்தார். இந்நிலையில் நேற்று முன்தினம் ஏரிக் கரை மீது அப்பகுதி மக்கள் நடந்து சென்றுள்ளனர்.
அப்போது, ஏரியில் உடல் ஒன்று மிதப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தனர். இதையடுத்து, பொதுமக்கள் தெள்ளார் காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் காவல் துறையினர் சம்பவ இடத்துக்கு வந்து பார்வையிட்டனர்.
உயிரிழந்த நபர் பிலிப்ஸ்ராஜ் என்பது தெரிய வந்தது. விசாரணையில் அவர் ஏரியில் தவறி விழுந்து உயிரிழந்துள்ளது தெரியவந்துள்ளது.
பின்னர், உடலை கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக வந்தவாசி அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர்.
இது குறித்து தெள்ளார் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
முக்கிய செய்திகள்
உலகம்
26 mins ago
விளையாட்டு
49 mins ago
வேலை வாய்ப்பு
58 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
விளையாட்டு
1 hour ago
கல்வி
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
வாழ்வியல்
2 hours ago
தமிழகம்
3 hours ago
இந்தியா
3 hours ago