கரோனா அதிகரிப்பால் புதுச்சேரி மத் திய பல்கலைக்கழகம் இன்று முதல் வரும் 27-ம் தேதி வரை மூடப்படுகிறது. அதேபோல் விடுதிகளையும் வரும் 25-ம் தேதிக்குள் காலி செய்ய உத்தரவிடப் பட்டுள்ளது.
புதுச்சேரி பல்கலைக்கழக பதிவாளர் (பொறுப்பு) சேகர் நேற்றுவிடுத்துள்ள அறிவிப்பில் கூறியி ருப்பதாவது:
எதிர்பாராத வகையில் கரோனாதொற்று பல்கலைக்கழக பேராசிரியர்கள், அதிகாரிகள், பணியாளர் கள் மற்றும் மாணவர்கள் இடையே அதிகரித்துள்ளது. அதனால் இன்று(ஏப். 23) முதல் வரும் 27-ம் தேதிவரை பல்கலைக்கழக வளாகம்மூடப்படுகிறது. அதே நேரத்தில்பல்கலைக்கழகத்தில் அத்தியா வசிய பணிகளுக்கு இந்த மூடல்பொருந்தாது என்று தெரிவிக் கப்பட்டுள்ளது.
விடுதிகள் மூடல்
விடுதிகளில் இருந்து புறப் படும்போது தங்கள் அறையில் வைத்துள்ள விலை மதிப்புள்ள சாதனங்கள், லேப்டாப், மொபைல், கல்வி சான்றுகள் ஆகியவற்றை பத்திரமாக கையோடு எடுத்து செல்வது அவசியம்.
விடுதிகளில் இருந்து மாணவர்களின் பெற்றோருக்கும், உள்ளூர் பாதுகாவலருக்கும் தகவல் தெரிவிக்கப்படும். அத்து டன் உணவு விடுதி வரும் 26-ம் தேதி முதல் மூடப்படும். அதேபோல் விடுதியில் தங்காத இதர பிஎச்டி ஆராய்ச்சியாளர்கள், பட்டமேற்படிப்பு மாணவர்கள் ஆகியோரும் பல்கலைக்கழக வளாகத்துக்குள் வர அனுமதி இல்லை” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
முக்கிய செய்திகள்
இந்தியா
13 mins ago
சினிமா
23 mins ago
தமிழகம்
39 mins ago
கருத்துப் பேழை
47 mins ago
இந்தியா
53 mins ago
விளையாட்டு
28 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
சினிமா
2 hours ago
விளையாட்டு
2 hours ago
தமிழகம்
59 mins ago