குடியாத்தம் அருகே யானை தாக்கியதில் முதியவர் உயிரிழந்தார்.
வேலூர் மாவட்டம், குடியாத்தம் அடுத்த கொண்டபல்லி கிராமத்தைச் சேர்ந்தவர் சின்ன குப்பன்(62). இவர், கடந்த 17-ம் தேதி மேல்கொல்லப்பல்லி வனப் பகுதியில் ஆடுகளை மேய்த்துக் கொண்டிருந்தார்.
ஒற்றை யானை தூக்கி வீசியது
அப்போது, அங்கு வந்த ஒற்றை யானை சின்ன குப்பனை தூக்கி வீசியது. இதில், படுகாயம் அடைந்தவரை உடன் சென்ற சிலர் மீட்டு குடியாத்தம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். பின்னர், மேல் சிகிச்சைக்காக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர்.
அங்கு சிகிச்சை பலனின்றி சின்னகுப்பன் நேற்று முன்தினம் உயிரிழந்தார். இதுகுறித்து குடியாத்தம் கிராமிய காவல் துறையினர் விசாரித்து வருகின்றனர்.
முக்கிய செய்திகள்
விளையாட்டு
2 hours ago
இந்தியா
3 hours ago
விளையாட்டு
4 hours ago
சினிமா
5 hours ago
சுற்றுச்சூழல்
5 hours ago
விளையாட்டு
6 hours ago
இந்தியா
9 hours ago
வலைஞர் பக்கம்
9 hours ago
இந்தியா
9 hours ago
தமிழகம்
10 hours ago
இந்தியா
10 hours ago
தமிழகம்
10 hours ago