குடியாத்தம் அருகே - யானை தாக்கி முதியவர் உயிரிழப்பு : காவல் துறையினர் விசாரணை

By செய்திப்பிரிவு

குடியாத்தம் அருகே யானை தாக்கியதில் முதியவர் உயிரிழந்தார்.

வேலூர் மாவட்டம், குடியாத்தம் அடுத்த கொண்டபல்லி கிராமத்தைச் சேர்ந்தவர் சின்ன குப்பன்(62). இவர், கடந்த 17-ம் தேதி மேல்கொல்லப்பல்லி வனப் பகுதியில் ஆடுகளை மேய்த்துக் கொண்டிருந்தார்.

ஒற்றை யானை தூக்கி வீசியது

அப்போது, அங்கு வந்த ஒற்றை யானை சின்ன குப்பனை தூக்கி வீசியது. இதில், படுகாயம் அடைந்தவரை உடன் சென்ற சிலர் மீட்டு குடியாத்தம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். பின்னர், மேல் சிகிச்சைக்காக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர்.

அங்கு சிகிச்சை பலனின்றி சின்னகுப்பன் நேற்று முன்தினம் உயிரிழந்தார். இதுகுறித்து குடியாத்தம் கிராமிய காவல் துறையினர் விசாரித்து வருகின்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

2 hours ago

இந்தியா

3 hours ago

விளையாட்டு

4 hours ago

சினிமா

5 hours ago

சுற்றுச்சூழல்

5 hours ago

விளையாட்டு

6 hours ago

இந்தியா

9 hours ago

வலைஞர் பக்கம்

9 hours ago

இந்தியா

9 hours ago

தமிழகம்

10 hours ago

இந்தியா

10 hours ago

தமிழகம்

10 hours ago

மேலும்