பால்பண்ணை உரிமையாளருக்கு கத்திக்குத்து :

By செய்திப்பிரிவு

மதுரை அவனியாபுரம் பகுதியைச் சேர்ந்தவர் மகேசுவரன் (48). பால் பண்ணை நடத்துகிறார். இவ ரும், பெருங்குடி முத்து என்ப வரும் நீண்ட கால நண்பர்கள். இருவரும் கடந்த சில ஆண்டுகளாக ரியல் எஸ்டேட் தொழில் செய்து வந்தனர்.

இதற்கிடையே, தனது பால்பண்ணைத் தொழிலை விரிவாக்கம் செய்ய சிலரிடம் மகேசுவரன் கடன் வாங்கி யுள்ளார்.

அதுபோல், முத்துவிடமும் ரூ.1 கோடிக்கு மேல் கடன் பெற்று அத்தொகையைத் திரும்பத் தருவதில் தாமதம் செய்ததாகக் கூறப்படுகிறது.

நேற்று காலை அவனியாபுரம் பேருந்து நிலையம் அருகே மகேசுவரன் நின்றிருந்தபோது அங்கு பைக்கில் வந்த 3 பேர் "பணத்தை எப்போது கொடுப்பாய்" எனக் கேட்டு தகராறில் ஈடுபட்டனர். அப்போது

திடீரென கத்தியால் மகேசு வரனை வயிற்றில் குத்திவிட்டு தப்பினர். உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த அவரை அக்கம், பக்கத்தினர் மீட்டு அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.

இது குறித்த புகாரின்பேரில் முத்து மற்றும் அவரது மகன்களை அவனியாபுரம் போலீஸார் தேடுகின்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஜோதிடம்

1 hour ago

ஜோதிடம்

1 hour ago

இந்தியா

5 hours ago

விளையாட்டு

7 hours ago

க்ரைம்

8 hours ago

உலகம்

9 hours ago

விளையாட்டு

9 hours ago

வேலை வாய்ப்பு

9 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

10 hours ago

விளையாட்டு

10 hours ago

கல்வி

11 hours ago

மேலும்