திருவாரூர்: திருவாரூர் மாவட்டத்தில் திருத்துறைப்பூண்டி, மன்னார்குடி, திருவாரூர், நன்னிலம் ஆகிய நான்கு சட்டப்பேரவைத் தொகுதிகள் உள்ளன. இத்தொகுதிகளில் நேற்று முன்தினம் நடைபெற்ற வாக்குப்பதிவின்போது பதிவான வாக்குகள் விவரம்:
திருத்துறைப்பூண்டி சட்டப்பேரவைத் தொகுதியில் மொத்த வாக்காளர்கள் 2,39,972. இதில் ஆண்கள் 88,070 பேர், பெண்கள் 96,095 பேர் என மொத்தம் 1,84,165 பேர் வாக்களித்துள்ளனர். வாக்குப்பதிவு சதவீதம் 76.74.
மன்னார்குடி சட்டப்பேரவைத் தொகுதியில் மொத்த வாக்காளர்கள் 2,59,916. இதில், ஆண்கள் 90,889 பேர், பெண்கள் 1,02,334 பேர் என மொத்தம் 1,93,223 பேர் வாக்களித்துள்ளனர். வாக்குப்பதிவு சதவீதம் 74.34.
திருவாரூர் சட்டப்பேரவை தொகுதியில் மொத்த வாக்காளர்கள் 2,82,573. இதில், ஆண்கள் 1,00,494 பேர், பெண்கள் 1,06,011 பேர், மூன்றாம் பாலினத்தவர் 5 பேர் என 2,06,510 பேர் வாக்களித்துள்ளனர். வாக்குப்பதிவு சதவீதம் 73.08.
நன்னிலம் சட்டப்பேரவைத் தொகுதியில் மொத்த வாக்காளர்கள் 2,72,157. இதில், ஆண்கள் 1,07,528 பேர், பெண்கள் 1,13,133 பேர், மூன்றாம் பாலினத்தவர் 3 பேர் என மொத்தம் 2,20,664 பேர் வாக்களித்துள்ளனர். வாக்குப்பதிவு சதவீதம் 81.08.
பலத்த பாதுகாப்பு: வாக்குப்பதிவு நேற்று முன்தினம் நிறைவடைந்த நிலையில், அனைத்து வாக்குப்பதிவு இயந்திரங்களும் திருவாரூர் திருவிக அரசினர் கலைக் கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள வாக்கு எண்ணும் மையத்தில் உள்ள பாதுகாப்பு அறையில் வைக்கப்பட்டு, வேட்பாளர்கள் முன்னிலையில் அறை பூட்டி சீல் வைக்கப்பட்டது. வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள மையத்தை கண்காணிக்க வேட்பாளர்களின் முகவர்கள் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேலும், பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
முக்கிய செய்திகள்
விளையாட்டு
21 mins ago
வேலை வாய்ப்பு
30 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
விளையாட்டு
1 hour ago
கல்வி
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
வாழ்வியல்
2 hours ago
தமிழகம்
2 hours ago
இந்தியா
2 hours ago
தமிழகம்
3 hours ago