தமிழகத்தில் புதிதாக : 867 பேருக்கு கரோனா : 5 முதியவர்கள் உயிரிழப்பு

By செய்திப்பிரிவு

தமிழகத்தில் நேற்று புதிதாக 867 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று உறுதியானது. முதியவர்கள் 5 பேர் உயிரிழந்தனர்.

இது தொடர்பாக சுகாதாரத் துறைவெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

தமிழகத்தில் நேற்று 498 ஆண்கள், 369 பெண்கள் என மொத்தம் 867 பேர் கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டனர். அதிகபட்சமாக சென்னையில் 352 பேருக்கு வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது. இதன்மூலம் தமிழகத்தில் பாதிப்பு எண்ணிக்கை 8 லட்சத்து 61,429 ஆக அதிகரித்துள்ளது.

சென்னையில் இதுவரை 2 லட்சத்து33,166 பேர் உட்பட தமிழகம் முழுவதும் 8 லட்சத்து 43,423 பேர் குணமடைந்துள்ளனர். நேற்று மட்டும் சென்னையில் 237 பேர் உட்பட தமிழகம் முழுவதும் 561 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். சென்னையில் 2,135 பேர் உட்பட தமிழகம் முழுவதும் 5,450 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் 5 முதியவர்கள் உயிரிழந்தனர். இதன்மூலம் தமிழகத்தில் கரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 12,556 ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் மட்டும்4,182 பேர் இறந்துள்ளனர். தமிழகத்தில் அதிகபட்சமாக சென்னையில் 2 லட்சத்து 39,483 கோவையில் 56,624, செங்கல்பட்டில் 53,759, திருவள்ளூரில் 44,742 என்ற எண்ணிக்கையில் பாதிப்பு நிலவரம் உள்ளது. தமிழகத்தில் 258 அரசு மற்றும் தனியார் ஆய்வகங்களில் இதுவரை 1 கோடியே 84 லட்சத்து 13,572 பரிசோதனைகள் நடைபெற்றுள்ளன. நேற்று மட்டும் 64,193 பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளன.

இவ்வாறு ெய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

1 hour ago

க்ரைம்

4 hours ago

விளையாட்டு

4 hours ago

இந்தியா

5 hours ago

விளையாட்டு

6 hours ago

தமிழகம்

6 hours ago

சினிமா

7 hours ago

கல்வி

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

சினிமா

8 hours ago

தமிழகம்

8 hours ago

மேலும்