துத்திப்பட்டு மைதானத்தில் நடைபெற்று வந்த டி20 கிரிக்கெட் போட்டிகள் திடீர் ரத்து 120 வீரர்கள் ஹோட்டலில் இருந்து புறப்பட்டனர்

By செய்திப்பிரிவு

புதுச்சேரி கிரிக்கெட் சங்கம் டி20 கிரிக்கெட் போட்டிகளை திடீரென்று ரத்து செய்ததால் தனியார் நட்சத் திர ஹோட்டலில் இருந்த 120 வீரர்களும் புறப்பட்டனர்.

புதுச்சேரி துத்திப்பட்டு கிராமத் தில் தனியார் நிறுவனம் ஒன்று அரசு நிலம், நீர்நிலைகளை ஆக்கிர மித்து கிரிக்கெட் மைதானம் அமைத்துள்ளதாக புகார் எழுந்தது. அதன்மீது நடவடிக்கை எடுக்க துணை நிலை ஆளுநர் கிரண்பேடி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். இதை யடுத்து அந்தந்தத் துறையினர் நடவடிக்கை எடுக்கத் தொடங்கினர்.

அதேபோல் முதல்வர் நாராயணசாமியும், “கிரிக்கெட் மைதான விவ காரத்தில் யார் தவறு செய்தாலும் நடவடிக்கை எடுப்போம்” என்று தெரிவித்திருந்தார். தலைமைச் செயலர் அஸ்வனி குமார் விரிவான விசாரணையில் இறங்கினார். இதுதொடர்பாக ஆளுநர் கிரண் பேடி பிசிசிஐக்கு முழு தகவல்க ளையும் இரு நாட்களுக்கு முன்புஅனுப்பியிருந்ததாக தெரிவித்தி ருந்தார்.

இச்சூழலில் கிரிக்கெட் மைதா னத்துக்குச் செல்லும் தண்ணீர் விநி யோகம் மற்றும் மின் விநியோகம் நிறுத்தப்பட்டதாக கூறப்படுகிறது.

தற்போது புதுச்சேரி கிரிக் கெட் சங்கத்தின் (சிஏபி) சார்பில்டி20 கிரிக்கெட் போட்டி முதல் முறையாக துத்திப்பட்டு மைதானத்தில் நடத்தப்பட்டு வந்தது. வரும்27-ம் தேதி வரை போட்டிகள்நடைபெறுவதாக தெரிவிக்கப்பட்டி ருநத்து. 6 அணிகள் பங்கேற்றிருந்த இந்த போட்டி இரவு பகல் ஆட்டம் மற்றும் பகல் ஆட்டம் என தனித்தனியாக நடத்தப்பட்டு வந்தது. தற்போது 10 கிரிக்கெட் போட்டிகள் முடிவடைந்த நிலையில் அரசின் நடவடிக்கையால் டி20 கிரிக்கெட் போட்டியை திடீரென கிரிக்கெட் சங்கம் நேற்று ரத்து செய்தது. போட்டிக்காக தனியார் நட்சத்திர ஹோட்டலில் தங்க வைக்கப்பட்டிருந்த 6 அணிகளைச் சேர்ந்த 120 கிரிக்கெட் வீரர்களும் அங்கிருந்து புறப்பட்டதாக தெரிவித்துள்ளனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

7 mins ago

க்ரைம்

11 mins ago

சுற்றுச்சூழல்

47 mins ago

க்ரைம்

51 mins ago

இந்தியா

49 mins ago

சினிமா

1 hour ago

கருத்துப் பேழை

1 hour ago

சுற்றுலா

2 hours ago

சினிமா

2 hours ago

இந்தியா

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

மேலும்