ஓசூர் மாநகராட்சி தேர்தலில் போட்டியிட திமுகவில் விருப்ப மனு பெறும் பணி தொடக்கம் :

By செய்திப்பிரிவு

ஓசூர்: ஓசூர் மாநகராட்சியில் உள்ள 45 வார்டுகளுக்கு அடுத்த மாதம் முதன் முறையாக தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலில் போட்டியிட திமுக-வில் விருப்பமனுக்கள் பெறும் பணி நடைபெற்றது.

ஓசூர் - தளி சாலையில் உள்ள மேற்கு மாவட்ட திமுக அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்வில் மேற்குமாவட்டச் செயலாளரும், ஓசூர் எம்எல்ஏ.வுமான ஒய்.பிரகாஷ் தலைமை தாங்கி மாநகராட்சி தேர்தலில் போட்டியிட விரும்பும் கட்சி உறுப்பினர்களிடமிருந்து விருப்பமனுக்களை பெற்றுக்கொண்டார். முதல் நாளான நேற்று ஓசூர் முன்னாள் நகர தலைவர்கள் குருசாமி, என்எஸ்.மாதேஸ்வரன் உட்பட 100-க்கும் மேற்பட்டவர்கள் ரூ.10ஆயிரம் தொகையுடன் விருப்பமனு அளித்தனர். இந்நிகழ்வில் ஓசூர் முன்னாள் எம்எல்ஏ எஸ்.ஏ.சத்யா உட்பட பலர் பங்கேற்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

5 mins ago

இந்தியா

22 mins ago

சினிமா

32 mins ago

தமிழகம்

48 mins ago

கருத்துப் பேழை

56 mins ago

இந்தியா

1 hour ago

விளையாட்டு

37 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

சினிமா

2 hours ago

விளையாட்டு

2 hours ago

மேலும்