முகவரி கேட்பதுபோல நடித்து இளைஞரிடம் தங்கச் சங்கிலி பறிப்பு :

By செய்திப்பிரிவு

தஞ்சாவூரில் முகவரி கேட்பதுபோல நடித்து, இளைஞரிடம் தங்கச் சங்கிலி பறிக்கப்பட்டது.

தஞ்சாவூர் வண்ணாந்துறை டவுன் கரம்பை சாலையைச் சேர்ந்தவர் கணேசமூர்த்தி (37). இவர், நேற்று முன்தினம் அதே பகுதியில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது, மோட்டார் சைக்கிளில் வந்த அடையாளம் தெரியாத நபர் கேட்ட முகவரி குறித்து, கணேசமூர்த்தி தகவல் கூறியுள்ளார். அப்போது, கணேசமூர்த்தி அணிந்திருந்த 2 பவுன் தங்கச் சங்கிலியை மோட்டார் சைக்கிளில் வந்த நபர் பறித்துக் கொண்டு தப்பிச் சென்றார். இதுகுறித்து கிழக்கு காவல் நிலையத்தினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

17 mins ago

தமிழகம்

17 mins ago

சினிமா

21 mins ago

கல்வி

26 mins ago

தமிழகம்

52 mins ago

தமிழகம்

1 hour ago

சினிமா

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

சுற்றுலா

1 hour ago

தமிழகம்

1 hour ago

சினிமா

2 hours ago

மேலும்