ஓசூரில் கட்டிட மேஸ்திரி கொலை வழக்கில் 2 பேர் கைது :

By செய்திப்பிரிவு

ஓசூரில் கட்டிட மேஸ்திரியை கொலை செய்த 2 பேரை போலீஸார் கைது செய்தனர்.

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே உள்ள என்பி அக்ரஹாரத்தைச் சேர்ந்த கட்டிட மேஸ்திரி லட்சுமணன் (52). இவரது முதல் மனைவி ரத்தினம்மா (45). லட்சுமணனின் சகோதரர் இறந்துவிடவே, அவரது மனைவி காவேரி (41) என்பவரை 2-வது திருமணம் செய்து கொண்டார். இந்நிலையில், காவேரிக்கும், ஓசூர் வெங்கடேஷ் நகரைச் சேர்ந்த கட்டிட மேஸ்திரி சதீஷ் என்பவருக்கும் தவறான பழக்கம் ஏற்பட்டது. இதுதொடர்பாக லட்சுமணன், சதீஷூக்கு இடையே தகராறு ஏற்பட்டது.

நேற்று முன்தினம் லட்சுமணன், தனது நண்பரான ஓசூர் சமத்துவ புரத்தைச் சேர்ந்த லாரி ஓட்டுநர் மகேந்திரன் (38) என்பவருடன் சேர்ந்து திட்டமிட்டு சதீஷுக்கு மது வாங்கிக் கொடுத்து, பாட்டிலால் குத்தியும், கல்லால் தாக்கியும் கொலை செய்தனர். இதுதொடர்பாக ஓசூர் நகர போலீஸார் கொலை வழக்குப்பதிவு செய்து நேற்று லட்சுமணன் மற்றும் மகேந்திரனை கைது செய்தனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

3 hours ago

இந்தியா

3 hours ago

விளையாட்டு

5 hours ago

சினிமா

5 hours ago

சுற்றுச்சூழல்

5 hours ago

விளையாட்டு

7 hours ago

இந்தியா

9 hours ago

வலைஞர் பக்கம்

9 hours ago

இந்தியா

10 hours ago

தமிழகம்

10 hours ago

இந்தியா

11 hours ago

தமிழகம்

11 hours ago

மேலும்