ஈரோடு எஸ்ஆர்எம் ஸ்வீட்ஸ் நிறுவனத்தில் தீபாவளி சிறப்பு விற்பனை தொடக்கம் :

By செய்திப்பிரிவு

ஈரோடு எஸ்ஆர்எம் நிறுவனத்தில் தீபாவளி சிறப்பு விற்பனை தொடங்கப்பட்டுள்ளது. முதல் விற்பனையை எஸ்ஆர்எம் ஸ்வீட்ஸ் அண்டு கேக்ஸ் நிறுவனங் களின் நிர்வாக இயக்குநர் எஸ்.ஆர்.மகுடீஸ்வரன், இயக்கு நர்கள் வினோத் சிங்காரம், சுடர்வண்ணன், பரணிதரன் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.

இதுகுறித்து அவர்கள் கூறியதாவது:

ஈரோடு திருவிக சாலை, முனிசிபல் காலனி, பெருந்துறை சாலை, பழைபாளையம் பிரிவு, திருநகர் காலனி தபால் நிலையம் சாலை, ஆர்கேவி சாலை, கொல்லம்பாளையம், கோபி ஈரோடு பிரதான சாலை, பாரியூர் பிரிவு மற்றும் கரூர், திருச்செங்கோடு, நாமக்கல் ஆகிய இடங்களில் எஸ்ஆர்எம் இனிப்பு கடைகள் செயல்பட்டு வருகின்றன. இந்த கடைகளில் இனிப்பு, கார வகைகள் அறிமுகப்படுத்தப்பட்டிருப்பது வாடிக்கையாளர்களிடையே சிறந்த வரவேற்பை பெற்றுள்ளது.

இக்கடைகளில் லட்டு, ஜிலேபி, அல்வா, ரசகுலா, மைசூர்பா, மில்க் ஸ்வீட்ஸ், பாதுஷா, ஸ்வீட் பூந்தி, சோன்பப்டி, மில்க்கேக், முந்திரி கேக், பாதாம் கேக் போன்ற இனிப்பு வகைகள் புதுப்புது சுவைகளில் கிடைக்கும். அதுபோல் அனைத்து காரவகைகளும் கிடைக்கும். சர்க்கரை நோயாளிகள் இனிப்புகளை கவலையின்றி சாப்பிடும் வகையில் சுகர்பிரி என்ற சர்க்கரை இல்லாத இனிப்பு வகைகள் வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்படுகிறது. இதில் லட்டு, குளோப்ஜாமூன், சோன்பப்டி ஆகியவை உள்ளன. தற்போது சீர்வரிசை இனிப்பு புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

இதில், வாழைப்பழம், தேங்காய், வெற்றிலைப்பாக்கு, பூ, ஆப்பிள், சீத்தாப்பழம் ஆகிய பொருட்கள் வைக்கப் பட்டதைப் போல் இனிப்புகளில் பிரத்யோகமாக செய்து கொடுக்கப்படுகிறது. சீர்வரிசை வழங்குபவர்களுக்காக பட்டு சேலை, வேட்டி ஆகிய வடிவங் களிலும் இனிப்புகள் பிரத்யேகமாக தயாரித்து வழங்கப்படுகிறது, என்றனர். 

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

1 hour ago

கல்வி

1 hour ago

ஜோதிடம்

2 hours ago

ஜோதிடம்

2 hours ago

இந்தியா

4 hours ago

க்ரைம்

7 hours ago

விளையாட்டு

7 hours ago

இந்தியா

8 hours ago

விளையாட்டு

10 hours ago

தமிழகம்

10 hours ago

சினிமா

10 hours ago

கல்வி

10 hours ago

மேலும்