தூத்துக்குடி மாவட்டத்தில் - திமுக கூட்டணி கட்சியினர் இன்று ஆர்ப்பாட்டம் :

By செய்திப்பிரிவு

தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக பொறுப்பாளரும், தமிழக சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சருமான பெ. கீதாஜீவன், தெற்கு மாவட்ட திமுக பொறுப்பாளரும், தமிழக மீன்வளம், மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சருமான அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் ஆகியோர் தனித்தனியாக வெளியிட்டுள்ள அறிக்கை:

காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தி தலைமையில் கடந்த 20.08.2021 நடைபெற்ற இந்திய அளவிலான எதிர்க்கட்சித் தலைவர்கள் பங்கேற்ற காணொலி கூட்டத்தில், மூன்று வேளாண் சட்டங்களை ரத்து செய்ய மறுப்பது, பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலை உயர்வு உள்ளிட்ட மத்திய பாஜக அரசின் நடவடிக்கைகளைக் கண்டித்து நாடு முழுவதும் செப்டம்பர் 20 முதல் 30-ம் தேதி வரை பல்வேறு போராட்டங்களை நடத்துவது என தீா்மானிக்கப்பட்டது.

அதன்படி திமுக தலைமையிலான கூட்டணிக் கட்சிகளின் சார்பில் இன்று (செப்.20) காலை 10 மணியளவில் தூத்துக்குடி வடக்கு, தெற்கு மாவட்டங்களுக்கு உட்பட்ட திமுக மற்றும் கூட்டணிக் கட்சிகளின் நிர்வாகிகள், தொண்டர்கள் அனைவரும் தங்களின் இல்லம் முன்பு கருப்புக் கொடி ஏந்தி கண்டனப் போராட்டத்தில் ஈடுபட வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

2 mins ago

வலைஞர் பக்கம்

5 mins ago

தமிழகம்

18 mins ago

சினிமா

41 mins ago

வாழ்வியல்

1 hour ago

உலகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

இந்தியா

1 hour ago

சினிமா

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

ஓடிடி களம்

2 hours ago

மேலும்