மாமூல் தர மறுத்த மருத்துவருக்கு பீர்பாட்டில் குத்து :

By செய்திப்பிரிவு

புதுச்சேரி கோவிந்தசாலை சுப்பிரமணிய சிவா வீதியைச் சேர்ந்தவர் மணிவண்ணன்(47). மருத்துவரான இவர், கதிர்காமம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பணியாற்றி வருகிறார்.

நாள்தோறும் இவர், உப்பளம் இந்திரா காந்தி விளையாட்டு மைதானத்தில் ஹாக்கி விளையாட்டுப் பயிற்சியை மேற்கொள் வது வழக்கம்.

சமீபகாலமாக அவர் அங்கு பயிற்சியில் ஈடுபட்டிருந்த நிலை யில், வம்பாக்கீரப்பாளையம் அங்காளம்மன் கோயில் தெருவைச் சேர்ந்த ரவுடியான குமார் (எ) குரங்கு குமார் (40) தொடர்ந்து மாமூல் கேட்டு வந்துள்ளார். கடந்த 20-ம் தேதி மது குடிக்க பணம் கேட்கவே, மருத்துவர் மணிவண்ணன் இல்லை என்று கூறியதாக தெரிகிறது.

இதனால் ஆத்திரமடைந்த ரவுடி குமார், மருத்துவரை அசிங்கமாக திட்டியதோடு அங்கிருந்த பீர் பாட்டிலை எடுத்து மருத்துவரின் தலையில் குத்தி, கொலை மிரட்டல் விடுத்து விட்டுச் சென்றார். காயமடைந்த மருத்துவர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப் பட்டார்.

இது குறித்து அவர் நேற்று முன்தினம் கொடுத்த புகாரின் பேரில் ஒதியஞ்சாலை போலீஸார் வழக்குப்பதிவு செய்து ரவுடியை கைது செய்தனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

4 hours ago

க்ரைம்

4 hours ago

விளையாட்டு

5 hours ago

இந்தியா

5 hours ago

வணிகம்

6 hours ago

தமிழகம்

7 hours ago

விளையாட்டு

7 hours ago

தமிழகம்

14 hours ago

மேலும்