திருவள்ளூர் மாவட்டம், ஆர்.கே.பேட்டையை அடுத்த வங்கனூர் கிராமத்தைச் சேர்ந்தவர் மண்ணப்பன் (50). நெசவுத் தொழிலாளியான இவர் நேற்று அதிகாலையில் வயல்வெளியில் நடந்து சென்றார்.
அப்போது, அப்பகுதியில் நேற்று முன்தினம் இரவு பெய்த மழையால் தேங்கிக் கிடந்த தண்ணீரில் அறுந்து கிடந்த மின்கம்பியை கவனிக்காமல் மிதித்து விட்டார். இதனால், மின்சாரம் பாய்ந்து மண்ணப்பன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இதுகுறித்து தகவல் அறிந்த ஆர்.கே.பேட்டை போலீஸார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று மண்ணப்பன் சடலத்தை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
முக்கிய செய்திகள்
கருத்துப் பேழை
6 mins ago
விளையாட்டு
10 mins ago
இந்தியா
14 mins ago
உலகம்
21 mins ago
சினிமா
1 hour ago
வலைஞர் பக்கம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
சினிமா
1 hour ago
விளையாட்டு
2 hours ago
விளையாட்டு
2 hours ago
இந்தியா
2 hours ago