தூத்துக்குடி: தூத்துக்குடி மாநகராட்சி ஆணையர் சாருஸ்ரீ வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: குடிநீர் விநியோக நேரங்களில் மாநகராட்சி பணியாளர்கள் கள ஆய்வு மேற்கொண்ட போது பல்வேறு பகுதிகளில் தொடர்ச்சியாக நீர்கசிவுகள் ஏற்பட்டு, குடிநீர் விநியோகம் வெகுவாக பாதிப்படைவது கண்டறியப்பட்டுள்ளது. இதற்கான காரணங்களை ஆய்வு செய்ததில் குடிநீரை மின் மோட்டார் மூலம் நேரடியாக உறிஞ்சி எடுக்கும் முறையற்ற செயலில் பெரும்பாலானவர்கள் ஈடுபடுவது தெரியவந்துள்ளது. இதனால் கடைமடை பகுதிகளுக்கு குடிநீர் செல்வதில் இடையூறு ஏற்படுகிறது.
குடிநீர் இணைப்பில் மின் மோட்டார் பொறுத்தியுள்ள நபர்கள் உடனடியாக மோட்டாரை அகற்ற வேண்டும். இல்லையெனில், குடிநீர் இணைப்பு துண்டிப்பு, மோட்டார் பறிமுதல் போன்ற நடவடிக்கை மேற்கொள்ளப்படும். மேலும், வீட்டு உபயோக இணைப்புகளுக்கு ரூ.15,400, வணிக உபயோக இணைப்புகளுக்கு ரூ.21,800 அபராதம் விதிக்கப்படும்.
முக்கிய செய்திகள்
கல்வி
42 mins ago
ஜோதிடம்
1 hour ago
ஜோதிடம்
1 hour ago
இந்தியா
3 hours ago
க்ரைம்
6 hours ago
விளையாட்டு
7 hours ago
இந்தியா
7 hours ago
விளையாட்டு
9 hours ago
தமிழகம்
9 hours ago
சினிமா
9 hours ago
கல்வி
9 hours ago
தமிழகம்
9 hours ago