கர்ப்பிணிகள் எந்தவித தயக்கமுமின்றி கரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ளலாம், கர்ப்பிணிகளுக்கு தடுப்பூசி போடுவதால் குழந்தைக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது என்று புதுச்சேரி சுகாதாரத்துறை இயக்குநர் மோகன்குமார் தெரிவித்துள்ளார்.
மத்திய அரசு வழிகாட்டுத லின்படி புதுச்சேரியில் 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் இலவசமாக கரோனா தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. இந்நிலையில்,கர்ப்பிணி பெண்களுக்கு தடுப்பூசி செலுத்தலாம் என, நோய்த்தடுப்புக்கான தேசிய தொழில்நுட்ப ஆலோசனைக்குழு பரிந்துரைத்தது. அதன் அடிப்படையில், கர்ப்பிணி பெண்களுக்கு தடுப்பூசி செலுத்த, மத்திய சுகாதார அமைச்சகம் ஒப்புதல் அளித்தது.
அதன்படி புதுச்சேரி ராஜீவ்காந்தி மகளிர் மற்றும் குழந்தைகள் மருத்துவமனையில் கர்ப்பிணி பெண்களுக்கு கரோனா தடுப்பூசி போடும் முகாம் தொடங்கப் பட்டுள்ளது.
3 வது அலை வருமா?
தற்போது கர்ப்பிணி பெண்களுக்கு கரோனா தடுப்பூசி போடும் திட்டத்தை தொடங்கிவைத்துள்ளோம். கர்ப்பிணிகளுக்கு தடுப்பூசி போடுவதால் குழந்தைக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது.
ராஜீவ் காந்தி மகளிர்மற்றும் குழந்தைகள் மருத்துவமனைக்கு வரும் அனைத்து கர்ப்பிணி பெண்களுக்கும் கரோனா தடுப்பூசி போடப்படும். புதுச்சேரியில் இதுவரை 5.5 லட்சம் தடுப்பூசி போட்டுள்ளோம். இதில் எந்தவித பெரிய பாதிப்பும், உயிரிழப்பும் ஏற்படவில்லை.
கரோனா 3 வது அலை வருமா? என்று தெரியாது. இருப்பினும், பாதுகாப்பு கருதி தடுப்பூசியை அதிகரிப்பதற்காக 3-ம் கட்டமாக தடுப்பூசி திருவிழா 10-ம் தேதி முதல் 12-ம் தேதி வரை நடக்கிறது. இதற்கு வேண்டிய 68 ஆயிரம் தடுப்பூசிகள் நம்மிடம் வந்துள்ளன. தடுப்பூசி தட்டுப்பாடு எதுவும் கிடையாது.
எனவே மக்கள் ஆர்வமுடன் தடுப்பூசி போட்டுக் கொண்டு பாதுகாப்புடன் இருக்க வேண்டும்.
குறிப்பாக, கர்ப்பிணிகள் எந்தவித தயக்கமுமின்றி வந்து தடுப்பூசி போட்டுக் கொள்ளலாம்.’’இவ்வாறு அவர் தெரிவித்தார்.
முக்கிய செய்திகள்
சினிமா
1 hour ago
கல்வி
1 hour ago
ஜோதிடம்
1 hour ago
ஜோதிடம்
1 hour ago
இந்தியா
4 hours ago
க்ரைம்
7 hours ago
விளையாட்டு
7 hours ago
இந்தியா
8 hours ago
விளையாட்டு
10 hours ago
தமிழகம்
10 hours ago
சினிமா
10 hours ago
கல்வி
10 hours ago