கோவில்பட்டி காந்தி நகர் பாலன்தெருவைச் சேர்ந்தவர் முனியசாமி மனைவி சித்ரா (44). கஸ்தூரிமகளிர் குழு தலைவராக இருந்துவரும் இவர், ஐடிஎப்சி மற்றும்மைக்ரோ பைனான்ஸ் நிறுவனம் மூலம் குழுவில் உள்ளவர்களுக்கு கடன் வாங்கி கொடுத்துள்ளார்.
அதற்கான தவணைத் தொகையை மாதந்தோறும் செலுத்தி வந்த இவர், கரோனா முடக்கம் காரணமாக வேலை இல்லாததால் இரு வாரங்களாக தவணைத் தொகையை செலுத்தவில்லை. இதையடுத்து ஐடிஎப்சி பைனான்ஸ் ஊழியர்களான விமல், கருப்பசாமி, பெரியசாமி, மைக்ரோ பைனான்ஸ் ஊழியர் வீரகுமார் மற்றும் இருவர் என 6 பேர் நேற்று முன்தினம் காலைசுமார் 6 மணிக்கு சித்ரா வீட்டுக்குள்அத்துமீறி நுழைந்து, சித்ராவின் செல்போன் மூலம் குழு உறுப்பினர்களை தொடர்பு கொண்டு அவரது வீட்டுக்கு வரவழைத்து தவணைத் தொகையை வட்டியோடு செலுத்துமாறு கூறி அவதூறாகப் பேசி மிரட்டியதாக கூறப்படுகிறது. இதுகுறித்து சித்ரா அளித்த புகாரின் பேரில், மேற்கு காவல் நிலைய போலீஸார் வீட்டுக்குள் அத்துமீறி நுழைந்து பெண்ணை மிரட்டியதாக 6 பேர் மீதும் வழக்குப் பதிவு செய்து தேடி வருகின்றனர்.
முக்கிய செய்திகள்
ஜோதிடம்
1 hour ago
ஜோதிடம்
1 hour ago
இந்தியா
5 hours ago
விளையாட்டு
7 hours ago
க்ரைம்
7 hours ago
உலகம்
8 hours ago
விளையாட்டு
9 hours ago
வேலை வாய்ப்பு
9 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
10 hours ago
விளையாட்டு
10 hours ago
கல்வி
10 hours ago