ஓசூர் வனச்சரகத்தில் கும்பளம் காப்புக்காட்டுக்குள் நாட்டுத்துப் பாக்கியுடன் 2 பேர் நுழைந்துள்ள தாக மாவட்ட வன அலுவலர் பிரபுவுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில் ஓசூர் வனச்சரக அலுவலர் ரவி மேற்பார்வையில் காருபெல்லாபிரிவு வனவர் கதிரவன் தலைமை யில் மூன்று பேர் கொண்ட சிறப்பு குழு அமைக்கப்பட்டு காருபெல்லா, கும்பளம் காப்புக்காட்டில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது அந்தப்பகுதியில் சந்தேகத்துக்கு இடமளிக்கும் வகையில் உரிமம் பெறாத நாட்டுத்துப்பாக்கியுடன் சுற்றிய 2 பேரை பிடித்து விசாரித்தனர். அதில் பெரியகுத்தி கிராமத்தைச்சேர்ந்த வெங்கடேசப்பா (24) என்பதும், ரவி (23) என்பதும், வனவிலங்குகளை வேட்டையாடும் நோக்கத் துடன் காட்டுக்குள் நுழைந்ததும் தெரியவந்தது.
அதைத் தொடர்ந்து இருவரும் கைது செய்யப்பட்டு நாட்டுத்துப்பாக்கி பறிமுதல் செய்யப் பட்டது. இதுகுறித்து மாவட்ட வன அலுவலர் பிரபு கூறுகை யில், சிறப்பு குழுவி னரால் கைது செய்யப்பட்ட இருவரும் வனவிலங்குகளை வேட்டையாட வனப்பகுதியில் நாட்டுத்துப்பாக்கியுடன் சுற்றித்திரிந் துள்ளனர் என்பது முதல்கட்டவிசாரணையில் தெரிய வந்துள்ளது.
மேலும் அவர்களிடமிருந்து கைப்பற்றப்பட்ட நாட்டுத் துப்பாக்கி எங்கு தயாரிக்கப் பட்டது, எந்த வழியாக எடுத்து வரப்பட்டது, இதுபோன்ற நாட்டுத்துப்பாக்கி வேறு ஏதேனும் இருக்கின்றனவா என்ற கோணத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது.
மேலும் இதில் முக்கிய பிரமுகர்கள் எவரேனும் சம்பந்தப்பட்டுள்ளனரா என்ற கோணத் திலும் விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும் சானமாவு, சூளகிரி மற்றும் பேரிகை போன்ற வனப்பகுதிக்கு அருகாமையில் உள்ள கிராமப்பகுதிகளி லும் சிறப்பு குழு அமைத்து கண் காணிக்க உத்தரவிடப் பட்டுள்ளது.
கடந்த வருடம் அஞ்செட்டி, உரிகம், தேன்கனிக்கோட்டை வனப்பகுதிக்கு அருகாமையில் உள்ள கிராமங்களில் சிறப்பு குழு அமைத்து 38 நாட்டுத்துப்பாக்கிகள் கைப்பற்றப்பட்டு காவல்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இவ்வாறு அவர் கூறினார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
1 min ago
தமிழகம்
11 mins ago
கருத்துப் பேழை
32 mins ago
தமிழகம்
30 mins ago
இந்தியா
49 mins ago
இந்தியா
56 mins ago
இந்தியா
1 hour ago
இந்தியா
1 hour ago
தமிழகம்
1 hour ago
இந்தியா
1 hour ago
க்ரைம்
1 hour ago
இந்தியா
1 hour ago