தி.மலை எஸ்பி பவன்குமார் பொறுப்பேற்பு :

By செய்திப்பிரிவு

திருவண்ணாமலை: திருவண்ணாமலை மாவட்ட காவல் கண்காணிப்பாளராக பவன் குமார் நேற்று பொறுப்பேற்றுக் கொண்டார்.

திருவண்ணாமலை மாவட்ட காவல் கண்காணிப்பாளராக பணியாற்றி வந்த அரவிந்த், திருப்பூர் மாநகர சட்டம்- ஒழுங்கு காவல் துணை ஆணையராக இடம் மாற்றம் செய்யப்பட்டார். அவருக்கு பதிலாக, திருச்சி மாநகர சட்டம் -ஒழுங்கு காவல் துணை ஆணையராக பணியாற்றி வந்த பவன்குமார் நியமிக்கப்பட்டார். இதையடுத்து அவர், திருவண்ணாமலை மாவட்ட காவல் அலுவலகத்தில் நேற்று பொறுப்பேற்றுக் கொண்டார். அவருக்கு, காவல் துறையினர் வாழ்த்து தெரிவித்தனர்.

இந்திய காவல் பணியில் கடந்த 2016-ம் ஆண்டு சேர்ந்த பவன்குமார், மதுரை மாவட்டத்தில் பயிற்சி உதவி காவல் கண்காணிப்பாளராகவும் மற்றும் திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி உட்கோட்டத்தில் உதவி காவல் கண்காணிப்பாளராகவும் பணியாற்றி உள்ளார். பின்னர், காவல் கண்காணிப்பாளராக பதவி உயர்வு பெற்று, திருச்சி மாநகர சட்டம் -ஒழுங்கு காவல் துணை ஆணையராக கடந்த 11-07-20-ம் தேதி பொறுப்பேற்றார். அங்கு பணியாற்றி வந்தவர், திமுக ஆட்சிக்கு வந்ததும் திருவண்ணாமலை மாவட்ட காவல் கண்காணிப்பாளராக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

4 hours ago

தமிழகம்

4 hours ago

சினிமா

26 mins ago

இந்தியா

38 mins ago

இந்தியா

48 mins ago

இந்தியா

1 hour ago

தமிழகம்

1 hour ago

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

தமிழகம்

1 hour ago

இந்தியா

1 hour ago

மேலும்