கிருஷ்ணகிரியில் மனைவியை அடித்துக் கொலை செய்த சிறப்பு காவல் உதவி ஆய்வாளரை போலீஸார் கைது செய்து, சிறையில் அடைத்தனர்.
கிருஷ்ணகிரி ராயக்கோட்டை சாலையில் உள்ள காவலர் குடியிருப்பில் வசித்து வருபவர் ரமேஷ். இவர், கிருஷ்ணகிரி அணை காவல் நிலையத்தில் சிறப்பு காவல் உதவி ஆய்வாளராக பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி ராஜலட்சுமி (36). இவர்களுக்கு திருமணமாகி 13 ஆண்டுகள் ஆகிறது. 2 மகன்கள், ஒரு மகள் உள்ளனர். இந்நிலையில் கடந்த 23-ம் தேதி ராஜலட்சுமி வீட்டில் இறந்து கிடந்தார். அவர் மாரடைப்பால் இறந்து விட்டதாக ரமேஷ் கூறினார். ராஜலட்சுமி கழுத்துப் பகுதியில் காயம் இருந்ததால், சந்தேகமடைந்த, கிருஷ்ணகிரி தாலுகா போலீஸார் சடலத்தை மீட்டு உடற்கூறு ஆய்விற்காக, கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். உடற்கூறு ஆய்வில், அவர் கழுத்தை நெரித்து கொலை செய்யப்பட்டது தெரிந்தது.
இதுதொடர்பாக எஸ்எஸ்ஐ ரமேஷிடம் போலீஸார் நடத்திய விசாரணையில், அவர் மனைவியை குடும்ப தகராறில் கழுத்தை நெரித்து கொலை செய்தது தெரிந்தது. இதுதொடர்பாக, கிருஷ்ணகிரி தாலுகா இன்ஸ்பெக்டர் சுரேஷ்குமார் வழக்குப்பதிவு செய்து ரமேஷை கைது செய்து, சிறையில் அடைத்தார்.
முக்கிய செய்திகள்
சினிமா
4 mins ago
தமிழகம்
20 mins ago
கருத்துப் பேழை
28 mins ago
இந்தியா
34 mins ago
விளையாட்டு
9 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
சினிமா
2 hours ago
விளையாட்டு
2 hours ago
தமிழகம்
40 mins ago
வலைஞர் பக்கம்
1 hour ago