மனைவி அடித்துக் கொலை சிறப்பு எஸ்எஸ்ஐ கைது :

By செய்திப்பிரிவு

கிருஷ்ணகிரியில் மனைவியை அடித்துக் கொலை செய்த சிறப்பு காவல் உதவி ஆய்வாளரை போலீஸார் கைது செய்து, சிறையில் அடைத்தனர்.

கிருஷ்ணகிரி ராயக்கோட்டை சாலையில் உள்ள காவலர் குடியிருப்பில் வசித்து வருபவர் ரமேஷ். இவர், கிருஷ்ணகிரி அணை காவல் நிலையத்தில் சிறப்பு காவல் உதவி ஆய்வாளராக பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி ராஜலட்சுமி (36). இவர்களுக்கு திருமணமாகி 13 ஆண்டுகள் ஆகிறது. 2 மகன்கள், ஒரு மகள் உள்ளனர். இந்நிலையில் கடந்த 23-ம் தேதி ராஜலட்சுமி வீட்டில் இறந்து கிடந்தார். அவர் மாரடைப்பால் இறந்து விட்டதாக ரமேஷ் கூறினார். ராஜலட்சுமி கழுத்துப் பகுதியில் காயம் இருந்ததால், சந்தேகமடைந்த, கிருஷ்ணகிரி தாலுகா போலீஸார் சடலத்தை மீட்டு உடற்கூறு ஆய்விற்காக, கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். உடற்கூறு ஆய்வில், அவர் கழுத்தை நெரித்து கொலை செய்யப்பட்டது தெரிந்தது.

இதுதொடர்பாக எஸ்எஸ்ஐ ரமேஷிடம் போலீஸார் நடத்திய விசாரணையில், அவர் மனைவியை குடும்ப தகராறில் கழுத்தை நெரித்து கொலை செய்தது தெரிந்தது. இதுதொடர்பாக, கிருஷ்ணகிரி தாலுகா இன்ஸ்பெக்டர் சுரேஷ்குமார் வழக்குப்பதிவு செய்து ரமேஷை கைது செய்து, சிறையில் அடைத்தார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

4 mins ago

தமிழகம்

20 mins ago

கருத்துப் பேழை

28 mins ago

இந்தியா

34 mins ago

விளையாட்டு

9 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

சினிமா

2 hours ago

விளையாட்டு

2 hours ago

தமிழகம்

40 mins ago

வலைஞர் பக்கம்

1 hour ago

மேலும்