வேலூர்/திருவண்ணாமலை : திருவண்ணாமலை மாவட்டம் சாத்தனூர் அணை பகுதியில் 9 மி.மீ., மழை பெய்துள்ளது.
திருவண்ணாமலை மாவட்டத்தில் கடந்த ஒரு மாதமாக வெயில் வாட்டி வதைத்தது. இந்நிலையில் நேற்று முன்தினம் பரவலாக மழை பெய்தது. மாவட்டத்தில் பல இடங்களில் நேற்றும் வானம் மேக மூட்டமாக காணப்பட்டது. இதனால், வெப்பம் சற்று தணிந்தது. விவசாயிகளும், பொதுமக்களும் மகிழ்ச்சி அடைந்தனர்.
தி.மலை மாவட்டத்தில் நேற்று காலை நிலவரப்படி சேத்துப்பட்டு மற்றும் கலசப்பாக்கம் பகுதிகளில் தலா 17.4 மி.மீ., மழை பெய்துள்ளது. மேலும், ஆரணி பகுதியில் 2, செங்கம் பகுதியில் 11.6, வந்தவாசி பகுதியில் 9, ஜமுனாமரத்தூர் பகுதியில் 4, போளூர் பகுதியில் 6.6, திருவண்ணாமலை பகுதியில் 2.1, தண்டராம்பட்டு பகுதியில் 10.6, கீழ்பென்னாத்தூர் பகுதியில் 2.4, வெம்பாக்கம் பகுதியில் 1 மி.மீ., மழை பெய்துள்ளது. மாவட்டத்தில் சராசரியாக 7 மி.மீ., மழை பெய்துள்ளது.
119 அடி உயரம் கொண்ட சாத்தனூர் அணையின் நீர்மட்டம் 82.55 அடியாக உள்ளது. அணையில் இருந்து விநாடிக்கு 470 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. அணையில் 1,727 மில்லியன் கனஅடி தண்ணீர் உள்ளது. அணை பகுதியில் 9 மி.மீ., மழை பெய்துள்ளது.
60 அடி உயரம் கொண்ட குப்பநத்தம் அணையின் நீர்மட்டம் 26.50 அடியாகவும், அணையில் 120.80 மில்லியன் கனஅடி தண்ணீர் உள்ளது. 22.97 அடி உயரம் கொண்ட மிருகண்டாநதி அணையின் நீர்மட்டம் 0.33 அடியாகவும், அணையில் 5.420 மில்லியன் கனஅடி தண்ணீர் உள்ளது. 62.32 அடி உயரம் கொண்ட செண்பகத்தோப்பு அணையின் நீர்மட்டம் 50.64 அடியாகவும், அணையில் 177.387 மில்லியன் கனஅடி தண்ணீர் உள்ளது.
வேலூர்
முக்கிய செய்திகள்
இந்தியா
8 mins ago
இந்தியா
21 mins ago
ஜோதிடம்
3 hours ago
ஜோதிடம்
3 hours ago
இந்தியா
7 hours ago
விளையாட்டு
9 hours ago
க்ரைம்
10 hours ago
உலகம்
10 hours ago
விளையாட்டு
11 hours ago
வேலை வாய்ப்பு
11 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
12 hours ago