தோவாளையில் போராட்டம் :

By செய்திப்பிரிவு

தோவாளை அருகே குளத்துவிளை பகுதியில் கடந்த சில நாட்களாக வீடுகளில் மின்தடை ஏற்பட்டு வருவதால் மக்கள் அவதியடைந்து வருகின்றனர். இதனால் திருட்டு சம்பவங்களும் அதிகரித்து வருகின்றன.

இது தொடர்பாக குளத்துவிளை பகுதி மக்கள் தோவாளைமின்வாரிய அலுவலகத்தில் பலமுறை புகார் அளித்தும் இதுவரை தீர்வு காணப்படவில்லை.

இதையடுத்து சீரான மின் விநியோகம் கோரி அப்பகுதி மக்கள் தோவாளை ஒன்றிய பாஜக தலைவர் கிருஷ்ணன் தலைமையில் தோவாளை மின்வாரிய அலுவலகம் முன் திரண்டு போராட்டம் நடத்தினர்.

தோவாளை ஊராட்சிமன்றத் தலைவர் நெடுஞ்செழியன், துணைத் தலைவர் தாணு உட்பட திரளானோர் கலந்துகொண்டனர். மின்வாரியப் பொறியாளர்கள் அங்கு வந்து, இரவுக்குள் மின்தடை பிரச்சினை சீரமைக்கப்படும் என அவர்களிடம் உறுதி அளித்ததையடுத்து போராட்டம் கைவிடப்பட்டது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

3 mins ago

தமிழகம்

6 mins ago

சுற்றுலா

18 mins ago

தமிழகம்

20 mins ago

சினிமா

25 mins ago

கருத்துப் பேழை

1 hour ago

இந்தியா

28 mins ago

தமிழகம்

1 hour ago

விளையாட்டு

1 hour ago

தமிழகம்

2 hours ago

சினிமா

2 hours ago

தமிழகம்

3 hours ago

மேலும்