அரியலூர்: அரியலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் சைபர் கிரைம் காவல் நிலையம் நேற்று முன்தினம் தொடங்கப்பட்டது.
நிகழ்ச்சியில், எஸ்.பி வீ.பாஸ்கரன் அலுவலகத்தை தொடங்கி வைத்து பேசியது: பொதுமக்களிடம் கணினி மற்றும் செல்போன் பயன்பாடு அதிகரித்து வருவதால் அதன் மூலம் பல சைபர் கிரைம் குற்றங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. இதைத் தடுக்க சைபர் கிரைம் காவல் நிலையம் ஒவ்வொரு மாவட்டத்திலும் அமைக்கப்பட்டு வருகிறது. அதன்படி, அரியலூரில் தொடங்கப்பட்டுள்ள இந்த காவல் நிலையத்தில் ஆன்லைன் பண மோசடி, பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான இணையவழி குற்றங்கள், இணையவழி பாலியல் துன்புறுத்தல்கள் உள்ளிட்ட ஆன்லைன் குற்றங்கள் குறித்து புகார் அளிக்கலாம். மேலும், சமூக வலைதளங்களில் அவதூறு செய்தி வெளியிடுவோர் மீது சைபர் கிரைம் காவல்துறை மூலம் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். நிகழ்ச்சியில் சைபர் கிரைம் மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் ராதாகிருஷ்ணன், மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் திருமேனி உட்பட பலர் கலந்துகொண்டனர்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
15 mins ago
சினிமா
36 mins ago
தமிழகம்
40 mins ago
தமிழகம்
43 mins ago
சுற்றுலா
55 mins ago
தமிழகம்
57 mins ago
சினிமா
1 hour ago
கருத்துப் பேழை
1 hour ago
இந்தியா
1 hour ago
தமிழகம்
2 hours ago
விளையாட்டு
2 hours ago
இந்தியா
23 mins ago