நேற்று முன்தினம் செய்முறைத் தேர்வுக்குச் சென்ற கோட்டைமேடு அரசுப் பள்ளி மாணவர்களுக்கும், சத்திரிய நாடார் ஆண்கள் மேல்நிலைப் பள்ளி பிளஸ் 2 மாணவர்கள் சிலருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. பின்னர் அரசுப் பள்ளி மாணவர்கள் செய்முறைத் தேர்வை முடித்துவிட்டு வெளியே வந்தனர். அப்போது அங்கு வந்த சத்திரிய நாடார் ஆண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் பொன்முருகன், புவிக்கண்ணன் ஆகியோரைத் தாக்கினர். இதில் காயமடைந்த மாணவர்கள் கமுதி அரசு மருத்து வமனையில் புறநோயாளிகளாகச் சிகிச்சை பெற்றனர்.
இது குறித்து சத்திரிய நாடார் பள்ளிச் செயலர் சிவமுருகன் கொடுத்த புகாரின் பேரில், கோட்டைமேடு அரசுப் பள்ளி மாணவர்கள் 6 பேர் மீது கமுதி போலீஸார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
8 mins ago
தமிழகம்
17 mins ago
விளையாட்டு
12 mins ago
கல்வி
32 mins ago
தமிழகம்
47 mins ago
தமிழகம்
55 mins ago
வாழ்வியல்
1 hour ago
தமிழகம்
1 hour ago
இந்தியா
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
சினிமா
2 hours ago