வாக்கு எண்ணிக்கையின்போது சுற்றுக்கு 10 மேஜைகள் என குறைக்கும் முடிவை கைவிட வேண்டும் என புதுக்கோட்டை மாவட்ட தேர்தல் அலுவலரிடம் வேட்பாளர்கள் நேற்று வலியுறுத் தினர்.
புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள கந்தர்வக்கோட்டை, விராலி மலை, புதுக்கோட்டை, திருமயம், ஆலங்குடி மற்றும் அறந்தாங்கி ஆகிய 6 சட்டப்பேரவைத் தொகுதி களில் பதிவான வாக்குப்பதிவு இயந்திரங்கள் வாக்கு எண்ணும் மையமான புதுக்கோட்டை அரசு மகளிர் கலைக் கல்லூரியில் பலத்த பாதுகாப்புடன் வைக்கப் பட்டுள்ளன. பொதுவாக வாக்கு எண்ணிக்கையின்போது சுற்றுக்கு 14 வாக்குப்பதிவு இயந்திரங்களில் உள்ள வாக்குகளை எண்ணும் வகையில் 14 மேஜைகள் பயன்படுத்தப்படும். அதற்கேற்ப, நுண்பார்வையாளர்கள் மற்றும் கண்காணிப்பாளர்களும், வேட்பாளர்கள் தரப்பில் இருந்து முகவர்களும் நியமிக்கப்படுவர்.
இந்நிலையில், கரோனா பரவல் அதிகமாக இருப்பதால் ஒரே இடத்தில் அதிகமானோர் கூடுவதைத் தவிர்ப்பதற்காக, மே 2-ம் தேதி நடைபெறும் வாக்கு எண்ணிக்கையின்போது தலா 10 மேஜைகள் மட்டும் பயன்படுத்த உள்ளதாக தேர்தல் அலுவலர்கள் தெரிவித்துள்ளனர்.
இதற்கு திமுக கூட்டணி வேட் பாளர்கள் எதிர்ப்பு தெரிவித்துள் ளனர். இதுகுறித்து புதுக்கோட்டை மாவட்ட தேர்தல் அலுவலர் பி.உமாமகேஸ்வரியிடம் திமுக வேட்பாளர்கள் எஸ்.ரகுபதி (திரு மயம்), சிவ.வீ.மெய்யநாதன் (ஆலங்குடி), வி.முத்துராஜா (புதுக்கோட்டை), மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் எம்.சின்னதுரை (கந்தர்வக் கோட்டை), திமுக வடக்கு மாவட்ட பொறுப்பாளர் கே.கே.செல்லபாண்டியன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்டச் செயலாளர் எஸ்.கவிவர்மன் மற் றும் முகவர்கள் நேற்று மனு அளித்தனர்.
பின்னர், வேட்பாளர்கள் கூறிய தாவது: சுற்றுக்கு 10 மேஜைகளாக குறைப்பதால் இரவு வரை வாக்கு எண்ணிக்கை வெகு நேரம் நீடிக்கும். மேலும், வாக்கு எண்ணும் பணியில் ஈடுபடுவோரும் கடும் சோர்வுக்கு ஆளாவர். அத் துடன், முறைகேடுகள் நடக்கவும் வாய்ப்பு உள்ளதால் அத்தகைய திட்டத்தை கைவிட வேண்டும் என வலியுறுத்தியுள்ளோம் என்றனர்.
முக்கிய செய்திகள்
ஜோதிடம்
2 hours ago
ஜோதிடம்
2 hours ago
இந்தியா
7 hours ago
விளையாட்டு
8 hours ago
க்ரைம்
9 hours ago
உலகம்
10 hours ago
விளையாட்டு
10 hours ago
வேலை வாய்ப்பு
10 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
12 hours ago
விளையாட்டு
11 hours ago
கல்வி
12 hours ago