பண்ருட்டியில் கரோனாகட்டுப்பாட்டு அறை திறப்பு :

By செய்திப்பிரிவு

விருத்தாசலம்: கரோனா பரவலைத் தடுக்கும் விதமாக பண்ருட்டி நகராட்சிப் பகுதியில் கரோனா கட்டுப்பாட்டு அறைகள் திறக்கப்பட்டுள்ளன. இந்த கட்டுப்பாட்டு அறையில், நகராட்சி துறை, காவல்துறை, வருவாய் துறை, ஊரக வளர்ச்சி துறை, சுகாதார துறையினர் இணைந்து செயல்படுவர். இதன்மூலம் கரோனா நிலவரத்தை அவ்வப்போது கண்காணித்து, தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தி வருகின்றனர். கரோனா தடுப்பு நடவடிக்கை தொடர்பாக பண்ருட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நகராட்சிஆணையர் ரவி (பொறுப்பு) தலைமையில், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சீனுவாசன், ரவிச்சந்திரன் ஆலோசனையில் ஈடுபட்டனர். பண்ருட்டி நகரம் மற்றும் கிராம பகுதிகளில் உள்ள தொழில் நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்களுக்கு ஆரம்ப சுகாதார மருத்துவக் குழுவினர் நேரில் சென்று, விழிப்புணர்வு ஏற்படுத்தி தடுப்பூசிகள் போடும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

9 mins ago

க்ரைம்

13 mins ago

சுற்றுச்சூழல்

49 mins ago

க்ரைம்

53 mins ago

இந்தியா

51 mins ago

சினிமா

1 hour ago

கருத்துப் பேழை

1 hour ago

சுற்றுலா

2 hours ago

சினிமா

2 hours ago

இந்தியா

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

மேலும்