நீலகிரி மாவட்டம் குன்னூர் சட்டப்பேரவைத் தொகுதியில் அதிமுக சார்பில் அக்கட்சியின் மாவட்டச் செயலாளர் கப்பச்சி டி.வினோத், திமுக சார்பில்முன்னாள் அமைச்சர் க.ராமசந்திரன் ஆகியோர் போட்டியிடுகின்றனர்.
நேற்று முன்தினம் (ஏப்ரல் 5) இரவு குன்னூர் அருகேயுள்ள கொலக்கொம்பை, தூதூர்மட்டம் பகுதிகளில் அதிமுக வேட்பாளர் கப்பச்சி டி.வினோத் வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா செய்ததாகக்கூறி, அவரது வாகனத்தை மக்கள் சிறைபிடித்தனர். தகவலின்பேரில் காவல்துறையினர் மற்றும் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் அப்பகுதியில் விசாரணை மேற்கொண்டனர்.
இதுகுறித்து திமுக வேட்பாளர் க.ராமசந்திரன் கூறும்போது, ‘‘குன்னூர் சட்டப்பேரவைத் தொகுதி ழுவதும் அதிமுகவினர் பணம் பட்டுவாடா செய்துள்ளனர். கொலக்கொம்பை, தூதூர்மட்டம் பகுதிகளில் பணப்பட்டுவாடாவில் ஈடுபட்டதாக வேட்பாளர் இருந்த வாகனத்தை மக்களே சிறைபிடித்துள்ளனர். தேர்தல் அதிகாரிகளுக்கு பலமுறை தகவல் கொடுத்தும், அவர்கள் தாமதமாக வந்தனர். பணப்பட்டுவாடா புகார் குறித்து உரிய நடவடிக்கையை தேர்தல் அதிகாரிகள் மேற்கொள்ளாவிட்டால், அதிமுக வேட்பாளர் கப்பச்சி டி.வினோத் மீதுவழக்கு தொடர முடிவு செய்துள்ளேன்’’ என்றார்.
முக்கிய செய்திகள்
இந்தியா
2 hours ago
க்ரைம்
5 hours ago
விளையாட்டு
5 hours ago
இந்தியா
6 hours ago
விளையாட்டு
8 hours ago
தமிழகம்
8 hours ago
சினிமா
8 hours ago
கல்வி
8 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago
சினிமா
9 hours ago
தமிழகம்
9 hours ago