மாட்டு வண்டியிலிருந்து விழுந்தவர் உயிரிழப்பு :

By செய்திப்பிரிவு

குடியாத்தம் அருகே மாட்டு வண்டியில் இருந்து தவறி விழுந்த வியாபாரி உயிரிழந்தார்.

வேலூர் மாவட்டம் குடியாத்தம் கஸ்பா கவுதம்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் விநாயகம் (66). மாட்டு வண்டியில் வீதி, வீதியாக சென்று கோலமாவு விற்பனை செய்துவந்தார்.

இந்நிலையில், நேற்று முன்தினம் தனகொண்டப் பள்ளியில் வியாபாரம் முடித்துக் கொண்டு தனது மாட்டு வண்டியில் வீடு திரும்பினார். குடியாத்தம் அடுத்த காத்தாடிக்குப்பம் பேருந்து நிறுத்தம் அருகே வந்தபோது மாடுகள் மிரண்டு ஓடியதில், மாட்டு வண்டியில் இருந்து விநாயகம் தவறி விழுந்தார். அப்போது சக்கரம் அவர் மீது ஏறியதில் அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து குடியாத்தம் கிராமிய காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

2 hours ago

கல்வி

2 hours ago

ஜோதிடம்

2 hours ago

ஜோதிடம்

2 hours ago

இந்தியா

5 hours ago

க்ரைம்

8 hours ago

விளையாட்டு

8 hours ago

இந்தியா

9 hours ago

விளையாட்டு

10 hours ago

தமிழகம்

10 hours ago

சினிமா

10 hours ago

கல்வி

11 hours ago

மேலும்