குடியாத்தம் அருகே மாட்டு வண்டியில் இருந்து தவறி விழுந்த வியாபாரி உயிரிழந்தார்.
வேலூர் மாவட்டம் குடியாத்தம் கஸ்பா கவுதம்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் விநாயகம் (66). மாட்டு வண்டியில் வீதி, வீதியாக சென்று கோலமாவு விற்பனை செய்துவந்தார்.
இந்நிலையில், நேற்று முன்தினம் தனகொண்டப் பள்ளியில் வியாபாரம் முடித்துக் கொண்டு தனது மாட்டு வண்டியில் வீடு திரும்பினார். குடியாத்தம் அடுத்த காத்தாடிக்குப்பம் பேருந்து நிறுத்தம் அருகே வந்தபோது மாடுகள் மிரண்டு ஓடியதில், மாட்டு வண்டியில் இருந்து விநாயகம் தவறி விழுந்தார். அப்போது சக்கரம் அவர் மீது ஏறியதில் அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து குடியாத்தம் கிராமிய காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
முக்கிய செய்திகள்
சினிமா
2 hours ago
கல்வி
2 hours ago
ஜோதிடம்
2 hours ago
ஜோதிடம்
2 hours ago
இந்தியா
5 hours ago
க்ரைம்
8 hours ago
விளையாட்டு
8 hours ago
இந்தியா
9 hours ago
விளையாட்டு
10 hours ago
தமிழகம்
10 hours ago
சினிமா
10 hours ago
கல்வி
11 hours ago