4 பேர் குண்டர் சட்டத்தில் அடைப்பு :

By செய்திப்பிரிவு

தூத்துக்குடி: தூத்துக்குடியில் கொலை வழக்கில் தொடர்புடைய 4 பேர் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டனர்.

தூத்துக்குடி கதிர்வேல் நகர் 1-வது தெருவை சேர்ந்த ஜெயச்சந்திரன் மகன் மாரிமுத்து (36). இவரை முன்விரோதம் காரணமாக புதியம்புத்தூர் நீராவி மேடு பகுதியைச் சேர்ந்த முத்துக்குமார் என்ற மதுரை முத்து (32), தூத்துக்குடி அண்ணாநகரைச் சேர்ந்த லட்சுமணன் என்ற மாக்கா லட்சுமணன் (35), மறவன்மடம் பகுதியைச் சேர்ந்த சக்திவேல் என்ற சக்தி (36) மற்றும் அண்ணாநகரை சேர்ந்த இசக்கிராஜா என்ற ராஜா (32) ஆகியோர் சேர்ந்து கடந்த 25.02.2021 அன்று அரிவாளால் தாக்கி கொலை செய்தனர். இதுகுறித்து சிப்காட் காவல் நிலைய போலீஸார் வழக்கு பதிவு செய்து 4 பேரையும் கைது செய்தனர். இந்நிலையில் இவர்கள் நான்கு பேரையும் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க ஆட்சியருக்கு எஸ்பி ஜெயக்குமார் பரிந்துரை செய்தார். ஆட்சியர் உத்தரவின்பேரில் 4 பேரும் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

கல்வி

51 mins ago

ஜோதிடம்

1 hour ago

ஜோதிடம்

1 hour ago

இந்தியா

3 hours ago

க்ரைம்

6 hours ago

விளையாட்டு

7 hours ago

இந்தியா

7 hours ago

விளையாட்டு

9 hours ago

தமிழகம்

9 hours ago

சினிமா

9 hours ago

கல்வி

9 hours ago

தமிழகம்

10 hours ago

மேலும்