செஞ்சி அருகே தேவதானம் பேட்டை கிராமத்தைச் சேர்ந்தவர் ஆறுமுகம் ( 52). இவர் 2011-2016-ல்அக்கிராம ஊராட்சி மன்ற தலை வராக பதவி வகித்து வந்தார். அப்போது அதே ஊரைச் சேர்ந்த பச்சையப்பன் மனைவி சுதா( 35) என்பவருக்கு இந்திரா நினைவு குடியிருப்பு திட்டத்தில் வீடு கட்டஊரக வளர்ச்சித்துறை சார்பில் ஆணை வழங்கப்பட்டது. இத்திட் டத்தில் முதல் தவணை தொகை ரூ.59,541-க்கான காசோலை வழங்க சுதாவிடம் அப்போதைய ஊராட்சி மன்ற தலைவர் ஆறுமுகம் ரூ. 10 ஆயிரம் லஞ்சம் கேட்டுள்ளார். லஞ்சம் கொடுக்க விருப்பம் இல்லாத சுதா விழுப்புரம் லஞ்ச ஒழிப்பு போலீஸில் புகார் அளித்தார்.
இதையடுத்து கடந்த 21.8.2014-ல்போலீஸாரின் அறிவுரையின்படி ரூ. 10 ஆயிரத்தை சுதா, ஆறு முகத்திடம் கொடுத்தார்.
அப்போது லஞ்ச ஒழிப்பு போலீஸார் ஆறுமுகத்தை கைது செய்தனர். இவ்வழக்கு விழுப்புரம் ஊழல் ஒழிப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.
நீதிபதி மோகன் இவ்வழக்கில் ஆறுமுகத்திற்கு 4 ஆண்டு சிறைதண்டனையும், ரூ. 10 ஆயி ரம் அபராதம் விதித்து நேற்று தீர்ப்பளித்தார்.
இதையடுத்து ஆறுமுகம் கடலூர் மத்திய சிறையில் அடைக் கப்பட்டார்.
முக்கிய செய்திகள்
விளையாட்டு
2 hours ago
இந்தியா
2 hours ago
விளையாட்டு
4 hours ago
சினிமா
4 hours ago
சுற்றுச்சூழல்
4 hours ago
விளையாட்டு
6 hours ago
இந்தியா
8 hours ago
வலைஞர் பக்கம்
8 hours ago
இந்தியா
8 hours ago
தமிழகம்
9 hours ago
இந்தியா
9 hours ago
தமிழகம்
10 hours ago