மத்திய நாடாளுமன்ற விவகாரத் துறை மற்றும் கனரகதொழில்கள் மற்றும் பொதுநிறுவனங்கள் துறை இணைஅமைச்சர் அர்ஜுன் ராம்மேக்வால் நேற்று பங்காருஅடிகளாரை மேல்மருவத்தூர் சித்தர் பீடத்தில் சந்தித்து ஆசி பெற்றார்.
சித்தர் பீடம் வந்த அர்ஜுன்ராம் மேக்வாலுக்கு பூரண கும்ப மரியாதையுடன் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து கருவறைக்குச் சென்று ஆதிபராசக்தி அன்னைக்கு குங்கும அர்ச்சனை செய்து அவர் வழிபட்டார். பிறகு புற்று மண்டபம் சென்று வணங்கிவிட்டு சப்த கன்னியர் சந்நிதியில் வணங்கிய பின் நாகபீடத்தில் விளக்கு ஏற்றி வழிபட்டார்.
மேலும், அருட்கூடம் சென்று பங்காரு அடிகளாரை சந்தித்து ஆசி பெற்றார். தியான மண்டபம் சென்றும் தியானம் செய்தார். பின்னர் ஆதிபராசக்தி மருத்துவமனைக்கும் சென்றும் பார்வையிட்டார்.
இந்த நிகழ்ச்சியின்போது மருத்துவமனை நிர்வாக இயக்குநர் ரமேஷ் உடன் இருந்தார்.
முக்கிய செய்திகள்
உலகம்
33 mins ago
விளையாட்டு
56 mins ago
வேலை வாய்ப்பு
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
விளையாட்டு
2 hours ago
கல்வி
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
வாழ்வியல்
2 hours ago
தமிழகம்
3 hours ago
இந்தியா
3 hours ago