ஊதிய உயர்வு கோரி காமராசர் பல்கலைக்கழகக் கல்லூரி உதவிப் பேராசிரியர்கள் சார்பில் தொடர் ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது

By செய்திப்பிரிவு

ஊதிய உயர்வு கோரி காமராசர் பல்கலைக்கழகக் கல்லூரி உதவிப் பேராசிரியர்கள் சார்பில் தொடர் ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது.

மதுரை தல்லாகுளம் அருகி லுள்ள காமராசர் பல்கலைக் கழகக் கல்லூரியின் மூட்டா கிளை சார்பில் பல்கலைக்கழக மானியக் குழுவின் ஐந்தாவது ஊதியக் குழு தொகுப்பூதியத்தில் பணியாற்றும் கல்லூரி உதவி பேராசிரியர்களுக்கு மாத ஊதியமாக ரூ.25 ஆயிரம் வழங்க வேண்டும்.

மேலும், பல்கலைக்கழக அலுவலர்களுக்கும் ஊதிய உயர்வு வழங்க வேண்டும் என வலியுறுத்தி தொடர் ஆர்ப்பாட்டம் நடந்து வருகிறது.பல்கலைக்கல்லூரி நுழைவு வாயில் அருகே 4-வது நாளாக நேற்று நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு மூட்டா கிளைத் தலைவர் கு.சுரேஷ்குமார் தலைமை வகித்தார்.

பொருளாளர் ஏ.டி.செந்தா மரைகண்ணன், கிளைச் செயலாளர் ச.ராமசுந்தரம், மூட்டா முதலாம் மண்டல செயலாளர் எஸ்.ரமேஷ்ராஜ் மற்றும் உதவிப் பேராசிரியர்கள் பங்கேற்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சுற்றுச்சூழல்

10 mins ago

க்ரைம்

14 mins ago

இந்தியா

12 mins ago

சினிமா

1 hour ago

கருத்துப் பேழை

1 hour ago

சுற்றுலா

1 hour ago

சினிமா

1 hour ago

இந்தியா

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

ஓடிடி களம்

58 mins ago

தமிழகம்

3 hours ago

மேலும்