உத்திரமேரூர் அருகே பதுக்கி வைக்கப்பட்ட செம்மரக் கட்டை பறிமுதல்

By செய்திப்பிரிவு

உத்திரமேரூர் அருகே லாரியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த பல லட்சம் மதிப்புள்ள செம்மரக் கட்டைகள் நேற்று பறிமுதல் செய்யப்பட்டன. இது தொடர்பாக போலீஸார் ஒருவரை பிடித்து விசாரித்து வருகின்றனர்.

காஞ்சிபுரம் மாவட்டம், உத்திரமேரூரை அடுத்த தோட்டநாவல் பகுதியில் செம்மரம் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனைத் தொடர்ந்து உத்திரமேரூர் காவல் ஆய்வாளர் வெங்கடேசன் தலைமையிலான போலீஸார், அந்த இடத்துக்குச் சென்று சோதனை நடத்தினர். அப்போது ஒரு வீட்டுக்கு முன்பு ஆந்திர மாநில பதிவு எண் கொண்ட லாரியில் செம்மரக் கட்டைகள் இருப்பது தெரிய வந்தது. இதையடுத்து அந்த லாரியையும், செம்மரக் கட்டைகளையும் போலீஸார் பறிமுதல் செய்தனர். பறிமுதல் செய்யப்பட்ட செம்மரக் கட்டைகள் சுமார் 200 இருக்கலாம் எனக் கருதப்படுகிறது.

இதைத் தொடர்ந்து போலீஸார் அந்த லாரி நின்றிருந்த வீட்டு உரிமையாளரான ஜெயக்குமார் என்பவரை பிடித்து இந்த லாரி யாருக்கு சொந்தமானது? இது எவ்வாறு இங்கு வந்தது என்று விசாரித்து வருகின்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

30 mins ago

சினிமா

50 mins ago

சுற்றுச்சூழல்

1 hour ago

விளையாட்டு

2 hours ago

இந்தியா

4 hours ago

வலைஞர் பக்கம்

5 hours ago

இந்தியா

5 hours ago

தமிழகம்

5 hours ago

இந்தியா

6 hours ago

தமிழகம்

6 hours ago

இந்தியா

6 hours ago

ஜோதிடம்

5 hours ago

மேலும்