சர்க்கரை ஆலை தொழிலாளர்கள் வேலைநிறுத்தப் போராட்டம் நிறைவு

By செய்திப்பிரிவு

தருமபுரி மாவட்டம் கோபாலபுரம் கூட்டுறவு சர்க்கரை ஆலை தொழிலாளர்கள் போராட்டம் நேற்று முடிவுக்கு வந்தது.

பாப்பிரெட்டிப்பட்டி வட்டம் கோபாலபுரத்தில் சுப்பிரமணிய சிவா கூட்டுறவு சர்க்கரை ஆலை அமைந்துள்ளது. இந்த ஆலையில் 1000-க்கும் மேற்பட்ட தொழி லாளர்கள் பணியாற்றுகின்றனர். இவர்களின் 26 மாத ஊதிய நிலுவையை வழங்கக் கேட்டும், இதர கோரிக்கைகளை வலியுறுத்தியும் தொழிலாளர்கள் 11-ம் தேதி உள்ளிருப்பு வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டம் நேற்றும் தொடர்ந்தது.

தற்போது ஆலையில் கரும்பு அரவை தொடங்கப்பட்டுள்ள நிலை யில் தொழிலாளர்கள் வேலை நிறுத்தம் செய்ததால், ஆலைக்கு நூற்றுக்கும் மேற்பட்ட வாகனங்களில் கொண்டு வரப்பட்ட கரும்பு அப்படியே நிறுத்தப்பட்டது. மேலும், ஆங்காங்கே வயல்களில் வெட்டப்பட்ட கரும்பையும் ஆலைக்கு ஏற்றி வர முடியாத நிலை ஏற்பட்டது. இதற்கிடையில், ஆலை தொழிலாளர்களின் முன்னறிவிப்பு இல்லாத போராட்டதால், கரும்பு ஏற்றி வரும் லாரி, டிராக்டர் உள்ளிட்ட வாகன ஓட்டுநர்களும், உரிமையாளர்களும் தங்கள் தொழிலும், வாழ்வாதாரமும் பாதிக்கப் படுவதாகக் கூறி நேற்று ஆலைப் பகுதியில் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்நிலையில், நேற்று மாலை ஆலை நிர்வாகத்துடன் நடந்த பேச்சு வார்த்தையின் அடிப்படையில் போராட்டத்தில் ஈடுபட்ட தொழிலாளர்கள் போராட்டத்தை விலக்கிக் கொள் வதாக அறிவித்துள்ளனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

26 mins ago

வர்த்தக உலகம்

34 mins ago

இந்தியா

2 mins ago

தமிழகம்

1 hour ago

சினிமா

55 mins ago

இந்தியா

1 hour ago

சினிமா

1 hour ago

தமிழகம்

1 hour ago

கருத்துப் பேழை

1 hour ago

இந்தியா

1 hour ago

விளையாட்டு

1 hour ago

தமிழகம்

2 hours ago

மேலும்