வேலூர் மாநகராட்சி மற்றும் ராணிப்பேட்டை, திருப்பத்தூர், திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களில் உள்ள நகராட்சி அலுவலகங்களில் பாமகவினர் 20 சதவீத இடஒதுக்கீடு தொடர் பான கோரிக்கை மனுக்களை அளித்தனர்.
தமிழக அரசுப் பணிகளில் வன்னியர்களுக்கு 20 சதவீதம் தனி இட ஒதுக்கீடு வழங்கக் கோரி வன்னியர் சங்கம் மற்றும் பாமக சார்பில் தொடர் போராட்டம் நடைபெற்று வருகிறது. இதன் ஒரு பகுதியாக, மாநகராட்சி, நகராட்சி அலுவலகங்களில் கோரிக்கை தொடர்பான மனு அளிக்கும் போராட்டம் நேற்று நடைபெற்றது.
அதன்படி, வேலூர் அண்ணா கலையரங்கம் அருகே இருந்து பாமக மாநில அமைப்பு செயலாளர் செல்வகுமார் தலைமையில் அக்கட்சியினர் ஊர்வலமாக மாநகராட்சி அலுவலகம் நோக்கிச் சென்றனர். பின்னர், மாநகராட்சி அலுவலகம் முன்பாக இட ஒதுக்கீடு கோரி முழக்கமிட்டனர். தொடர்ந்து, பாமக மாநில துணை பொதுச் செயலாளர் இளவழகன், துணைத்தலைவர் என்.டி.சண்முகம் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் மட்டும் மாநக ராட்சி ஆணையர் சங்கரனிடம் கோரிக்கை மனுவை அளித்தனர்.
அதேபோல் குடியாத்தம், பேரணாம்பட்டு நகராட்சி அலுவலகத்திலும் பாமகவினர் இட ஒதுக்கீடு கோரி மனுவை அளித்தனர். ராணிப்பேட்டை மாவட்டத்தில் மேல்விஷாரம், ஆற்காடு, ராணிப்பேட்டை, வாலாஜா, அரக்கோணம் நகராட்சி அலுவலகங்களிலும் பாமகவினர் நேற்று இட ஒதுக்கீடு தொடர்பான கோரிக்கை மனுவை அளித்தனர்.
திருப்பத்தூர்
இதே கோரிக்கைகளை வலியுறுத்தி பாமகவினர் நேற்று திருப்பத்தூர் நகராட்சி அலுவலகம் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினரும், பாமக மாநில பொதுச்செயலாளருமான டி.கே.ராஜா தலைமை வகித்தார். நகரச்செயலாளர் சிவா முன்னிலை வகித்தார். இதில், நூற்றுக்கும் மேற்பட்ட பாமக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் பங்கேற்று கல்வி மற்றும் வேலை வாய்ப்பில் 20 சதவீதம் இட ஒதுக்கீடு வேண்டும் என வலியுறுத்தி முழக்கம் எழுப்பினர். பின்னர், நகராட்சி ஆணையாளர் சத்தியநாதனிடம் கோரிக்கை மனுவை பாமகவினர் வழங்கினர்.அதேபோல, வாணியம்பாடி நகராட்சி அலுவலகம் முன்பாக நேற்று நடைபெற்ற போராட் டத்துக்கு மாவட்டச்செயலாளர் வேல்முருகன் தலைமை வகித்தார். நிர்வாகிகள் சரவணன், கணபதி, ரத்தினம், அன்பரசு, பாலு உட்பட பலர் கலந்து கொண்டனர்.
மேலும், ஆம்பூர் நகராட்சி அலுவலகம் முன்பாக நடைபெற்ற போராட்டத்துக்கு மாவட்ட வழக்கறிஞர் பிரிவு மாவட்டத் தலைவர் கிருஷ்ணமூர்த்தி தலைமை வகித்தார். இதையடுத்து, நகராட்சி பொறியாளர் திலீபனிடம் பாமகவினர் கோரிக்கை மனுவை வழங்கினர்.
திருவண்ணாமலை
தி.மலை மாவட்டத்தில் உள்ள நகராட்சி அலுவலகங்கள் முன்பு நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தி.மலையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு நகரச் செயலாளர் பத்மநாபன் தலைமை வகித்தார். முன்னாள் எம்எல்ஏ எதிரொலிமணியன், மாநில துணை பொதுச் செயலாளர் காளிதாஸ், மாநில துணைத் தலைவர் ராதாகிருஷ்ணன் ஆகியோர் கலந்துகொண்டு, 20 சதவீத தனி இடஒதுக்கீடு கேட்டு முழக்கமிட்டனர். இதையடுத்து, நகராட்சி ஆணையாளர் நவேந்திரனிடம் பாமகவினர் மனு அளித்தனர்.ஆரணி நகராட்சி அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு மாநில பொதுச் செயலாளர் வேலாயுதம் தலைமை வகித்தார். 20 சதவீத தனி இடஒதுக்கீடு கேட்டு முன்னாள் எம்எல்ஏ வேலுச்சாமி பேசினார். பின்னர் கோரிக்கைகளை வலியு றுத்தி பாமக மற்றும் வன்னியர் சங்கத்தினர் முழக்கமிட்டனர். பின்னர், ஆரணி நகராட்சி ஆணை யாளர் ராஜ விஜய காமராஜிடம் பாமகவினர் மனு அளித்தனர்.
இதேபோல், செய்யாறு மற்றும் வந்தவாசி நகராட்சி அலுவலகங்கள் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
முக்கிய செய்திகள்
இந்தியா
7 mins ago
இந்தியா
48 mins ago
தமிழகம்
1 hour ago
இந்தியா
24 mins ago
தமிழகம்
1 hour ago
உலகம்
2 hours ago
சினிமா
2 hours ago
தமிழகம்
2 hours ago
வலைஞர் பக்கம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
சினிமா
3 hours ago
வாழ்வியல்
4 hours ago