கெலவரப்பள்ளி அணைக்கு நீர்வரத்து 568 கனஅடியாக சரிவு

By செய்திப்பிரிவு

கெலவரப்பள்ளி அணைக்கு நீர்வரத்து விநாடிக்கு 568 கனஅடியாக சரிந்துள்ளது.

கர்நாடக மாநிலம் பெங்களூரு மற்றும் தென்பெண்ணை ஆற்றின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை குறைந்துள்ளதால், கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் கெலவரப்பள்ளி அணைக்கு நீர்வரத்து குறைந்துள்ளது. நேற்று முன்தினம் காலை விநாடிக்கு 648 கனஅடியாக இருந்த நீர்வரத்து, நேற்று காலை விநாடிக்கு 568 கனஅடியாக குறைந்தது. அணையின் மொத்த கொள்ளளவான 44.28 அடியில் 40.02 அடிக்கு தண்ணீர் உள்ளதால், அணையில் இருந்து பாசன கால்வாய்கள் மற்றும் ஆற்றில் 568 கனஅடி தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளது.

கிருஷ்ணகிரி அணையை பொறுத்தவரை கடந்த 3 நாட்களாக அணைக்கு நீர்வரத்து 551 கனஅடியாக நீடித்து வருகிறது. அணையில் மொத்த உயரமான 52 அடியில் 50 அடிக்கு தண்ணீர் உள்ளது. அணையிலிருந்து விநாடிக்கு 551 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

13 mins ago

வர்த்தக உலகம்

21 mins ago

தமிழகம்

47 mins ago

சினிமா

42 mins ago

இந்தியா

1 hour ago

சினிமா

1 hour ago

தமிழகம்

1 hour ago

கருத்துப் பேழை

1 hour ago

இந்தியா

1 hour ago

விளையாட்டு

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

மேலும்