மின்வேலியில் சிக்கி இளைஞர் உயிரிழப்பு தோட்ட உரிமையாளர், குத்தகைதாரர் கைது :

By செய்திப்பிரிவு

ஈரோடு: தோட்ட பாதுகாப்பிற்காக போடப்பட்ட மின்வேலியில் சிக்கி இளைஞர் உயிரிழந்தது தொடர்பாக, தோட்ட உரிமையாளர் உள்ளிட்ட இருவரை போலீஸார் கைது செய்தனர்.

பவானிசாகர் அருகே உள்ள கோடேபாளையத்தைச் சேர்ந்தவர் நடராஜன் (52). இவருக்குச் சொந்தமான தோட்டத்தை, துரைசாமி (70) என்பவர் குத்தகைக்கு எடுத்து விவசாயம் செய்து வருகிறார். இவரது தோட்டத்தில் உள்ள கிணற்றில், பவானிசாகர் மீன்வளத்துறை அலுவலகத்தில் பணிபுரிந்து வந்த மாரிச்சாமி (28) என்பவர் கடந்த 21-ம் தேதி இறந்த நிலையில் மீட்கப்பட்டார். இதுகுறித்து பவானிசாகர் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.

இதில், துரைசாமி தனது தோட்டத்திற்குள் வனவிலங்குகள் நுழையாதவாறு போட்டிருந்த மின்வேலியில் சிக்கியதில், மாரிச்சாமி உயிரிழந்ததும், அதனை மறைக்க அவரது உடலைக் கிணற்றில் போட்டதும் தெரியவந்தது. இதையடுத்து, தோட்டத்தின் உரிமையாளர் நடராஜன், குத்தகைதாரர் துரைசாமி ஆகிய இருவரையும் கைது செய்த போலீஸார், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி கோபி கிளை சிறையில் அடைத்தனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

உலகம்

33 mins ago

விளையாட்டு

56 mins ago

வேலை வாய்ப்பு

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

விளையாட்டு

2 hours ago

கல்வி

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

வாழ்வியல்

2 hours ago

தமிழகம்

3 hours ago

இந்தியா

3 hours ago

மேலும்